Madurai

News April 15, 2025

மதுரை அரசு அலுவர்களின் தொடர்பு எண்கள்

image

மதுரையில் உள்ள முக்கிய அரசு அலுவலர்களின் தொடர்பு எண்கள்
1.மாவட்ட வருவாய் அலுவலர் – 0452-2532106
2.மாவட்ட வழங்கல் அலுவலா் -0452-2546125
3.உதவி ஆணையா் (கலால்) – 0452-2531718
4.வருவாய் கோட்டாட்சியா் -0452-2530644
5.உதவி இயக்குநா் -0452-2525099
6. தனி துணை ஆட்சியா் – 0452-2521260
உங்கள் நண்பர்ளுக்கு ஷேர் செய்யவும்

News April 15, 2025

சித்திரைத் திருவிழா பக்தர்களுக்கு கட்டண அறிவிப்பு

image

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

News April 15, 2025

அனைத்திலும் இந்தி திணிப்பு – சு. வெங்கடேசன் காட்டம்!

image

மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 15, 2025

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை

image

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர், இணை மற்றும் உதவி பேராசிரியர் பணிக்கு பல்வேறு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு M.Sc, ME/M.Tech, PhD படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை தகுதிகேற்ப மாத ஊதியம்வழங்கப்படும். இங்கு <>கிளிக் <<>>செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 15, 2025

மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

image

மதுரை, உசிலம்பட்டி உத்தப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயி. நேற்று தோட்டத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சென்று பார்த்த போது மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தார். அதே போல் பொய்கைகரைப்பட்டியை சேர்ந்தவர் மலைசாமி. வீட்டில் கேபிள் டிவி வயரை தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.மின்சாரம் சம்பந்தமான பொருட்களைக் கையாள்பவர்களுக்குத் தகுந்த உபகரணங்களுடன் செயல்பட SHARE செய்து அறிவுறுத்துங்க

News April 14, 2025

மதுரையில் பார்க்க வேண்டிய இடங்கள்

image

மதுரை மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோர் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சென்று வருகின்றனர்.ஆனால் அதையும் தவிர்த்து கட்டாயம் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள் உள்ளது.
1.திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில்
2.திருமலை நாயக்கர் அரண்மனை
3.மதுரை அழகர் கோவில்
4.காந்தி அருங்காட்சியகம்
5.வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
ஷேர் செய்யுங்கள்

News April 14, 2025

மதுரையில் 10ம் வகுப்பு படித்தால் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <>கிளிக் <<>>செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 14, 2025

போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி

image

மதுரை மாட்டுத்தாவணி நேஷனல் இன்ஸ்டிடியூட் சார்பில் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற 20 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப். 20ல் மையத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும். 95666 59484 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம். போலீஸில் சேர விரும்பும் உங்க நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு SHARE செய்து உதவவும்.

News April 13, 2025

மதுரையில் Vibe பண்ண இப்படி ஒரு இடமா.?

image

மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழவந்தான்  குருவித்துறை கிராமத்துக்கு உட்பட்ட சித்தாதிபுரம் அருவின்னு சொல்லக்கூடிய அணைக்கட்டு கடந்த சில மாதங்களாக டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிட்டு வருது. குறிப்பா விடுமுறை தினங்கள்ல இந்த பகுதிக்கு போனீங்கன்னா கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் தென்னை மரம், பனைமரம் போன்ற இயற்கை சார்ந்து இருக்கும்போது செம்ம வைஃப்-ஆ இருக்கும்.. Share It.

News April 13, 2025

மதுரை: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!

error: Content is protected !!