Madurai

News April 17, 2025

பல கோடி ரூபாய் சொத்துக்காக தொழிலதிபர் கடத்தல்

image

மதுரை, பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். மதுரையைச் சேர்ந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரராமனின் பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக, ஏப்., 14ல் சுந்தரராமன் வீட்டிற்கு சிலர் வந்து பேச்சு நடத்தினர். ஆனால், சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் வந்த காரில் அவரை கடத்திச் சென்றனர்.

News April 16, 2025

மதுரை : சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார்

image

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தாயார் காலமானார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி  தாயார்  மாரியம்மாள் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4.00 மணிக்கு திருப்பரங்குன்றம் மேல ரத வீதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

மதுரை: உள்ளூரிலேயே அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

News April 16, 2025

மதுரையில் ஏப்.26 முதல் கிராமிய விளையாட்டு போட்டி

image

மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு ஏப். 26 முதல் மே 3 வரை மதுரை கிராமிய ஒலிம்பிக் எனும் தலைப்பில் பல்வகை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஏப். 26 ல் பல்லாங்குழி, 28 ல் தாயம், 29 ல் தட்டாங்கல், 30 ல் கிட்டிப்புல், மே 1 ல் கோலிக்குண்டு, 2 ல் நொண்டி, 3ல் பம்பரம் விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் 97900 33307 வாட்ஸ் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.

News April 16, 2025

மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவனர் கடத்தல் 

image

மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வரும் சுந்தர் என்பவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தல்லாகுளம் பகுதியில் சிலர் கடத்தி சென்றதாக வந்த புகாரில் சுந்தரை மீட்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவரும் நிலையில் 5 பேரை பிடித்து விசாரணை. மேலும் 5 நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். பணத்திற்காக கடத்தப்பட்டாரா? வேறு எதுவும் காரணமா என தீவிர விசாரணை.

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

மதுரை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 16, 2025

சித்திரை திருவிழா பாதுகாப்பு கோர்ட் தள்ளுபடி

image

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள், திருவிழா பாதுகாப்பில் காவல்துறை முழு கவனம் செலுத்துகிறது. இம்மனு விளம்பரம் தேடும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, என கருத்து தெரிவித்தது. இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதிக்க மனுதாரர் தரப்பு கேட்ட போது அனுமதித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

News April 16, 2025

மதுரையில் இன்று வீடு வீடாக சென்று வரி வசூல்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிலுவையில் உள்ள வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி உட்பட அனைத்து வரிகளையும் இன்று  ஊராட்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வசூலிக்க உள்ளனர். மேலும் தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலரை அணுகி ரொக்கமாகவோ, G-PAY , கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவும் வரி செலுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News April 16, 2025

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் லட்சக்கணக்கில் மோசடி

image

உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து நகை கடன் பெற்று சங்க செயலாளர், பணியாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி.தன்னையும் சம்மந்தப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக சங்க பணியாளர்கள் மீது குற்றம் சாட்டி சங்கத்தின் எழுத்தர் பூச்சிபட்டியைச் சேர்ந்த செல்லாண்டி நேற்று வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News April 15, 2025

மதுரை மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல். 15) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!