India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட மின்சாரத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலக புகார் எண்கள்
▶️கே. புதூர் – 04522561754
▶️சமயநல்லூர்- 04522463429
▶️திருப்பள்ளி – 04522682904
▶️மேற்கு மதுரை – 04522605113
▶️தெற்கு மதுரை – 04522333707
▶️உசிலம்பட்டி – 04522252141
▶️திருமங்கலம் – 04549280775
மழை காலங்களில் அடிக்கடி மின்தடை எற்படும் அப்போது அதிகம் பயன்படும் எண்கள் இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட தொழில் மையத்தில் உணவுத் துறையில் தொழில் வளர்ச்சி குறித்து ஆக. 21 முதல் 23 வரை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் உதவித்தொகையுடன் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 10லட்சம், 3 % வட்டி மானியம் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு 97915 41990. அழைக்கவும். தொழில் துவங்க நல்ல வாய்ப்பு SHARE பண்ணுங்க.
மதுரை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
இரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி எழுதிய கடிதத்தில்; “தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்ட 3 மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே இரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது. தமிழ் கேள்வித்தாளுடன் மறு தேர்வு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் கோட்டைக்குமார் என்ற ராமகுமார் என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இவர், எல்.எல்.பி முடித்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மக்களே, டிகிரி படித்தவர்களுக்கு AI பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்து வருகிறது. TN Skill என்ற இணையதளத்திற்கு சென்று நிகழ்கால உச்ச தொழில்நுட்பமான AI டெக்னலாஜி உள்ளிட்ட ஐடி துறையின் பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து நம்ம மதுரையிலேயே இலவசமாக படிக்கலாம். ஆக. 18ல் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. இங்கு வேலைவாய்ப்பும் உறுதிசெய்ய வழிவகை செய்யப்படுகிறது. இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.செப்.28 ல் குரூப் 2 பணியிடங்கள் உட்பட 645 காலியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். பணம் கொடுத்து சேருவதற்கு பதில் அரசின் இலவச வகுப்பில் சேர்ந்து பயனடைங்க மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடவுச்சொல் பாதுகாப்பு
தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்குங்கள். இரண்டு அடுக்கு பாதுகாப்பினை பயன்படுத்தவும். கடவுச்சொற்களை யாருடனும், ஒருபோதும் பகிர வேண்டாம். கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றவும். தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்த வேண்டாம். குறைந்தது 8 எழுத்துகள் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளியில் (ஆகஸ்ட் 15) இன்று கொடியேற்ற நிகழ்வுக்கு செல்ல 20 ரூபாய்க்கு கேட்ட மாணவிக்கு தாய் பணம் தர மறுத்ததால், மாணவி ராஜராஜேஸ்வரி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 20 ரூபாய்க்காக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்கானூரணி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.