Madurai

News March 26, 2025

மதுரை: நாளை மின் நுகர்வோர்குறை தீர்க்கும் கூட்­டம்

image

மதுரை மின்­ப­கிர்­மான வட்­ட மேற்­பார்வை பொறியா­ளர் சந்­திரா, மதுரை மேற்கு அரசரடி கோட்­டத்திற்குட்­பட்ட மின் நு­கர்­வோர்­களை நாளை (மார்ச்.27)ப­கல் 11.00 மணி முதல் 1.00 மணி வரை நேரில் சந்­தித்து மின் தொடர்பான குறை­களை நிவர்த்தி செய்திட உள்ளார். மதுரை மேற்கு கோட்­டத்­திற்கு உட்­பட்ட மின் நு­கர்­வோர்­கள் தங்­கள் குறை­களை கூறி பயனடை­யலாம் என செயற்­பொ­றியா­ளர் லதா தெரிவித்துள்ளார்.

News March 26, 2025

மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

image

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News March 26, 2025

மதுரையில் செருப்பே அணியாத விசித்திர கிராமம்

image

மதுரை அருகே உள்ள அந்தமான் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் ஊருக்குள் செருப்பு அணிவது இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை உள்ளதாகவும் இதற்கு காரணம் கருப்பசாமி மீது உள்ள பக்திதான் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊர் எல்லைக்குள் வரும்போதும் செருப்பை கையில் எடுத்துச் செல்கின்றனர். இதனை மீறினால் சாமி பலி வாங்கிவிடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. *புது தகவல்னா பகிரவும்*

News March 26, 2025

ஒரு நாள் கல்வி சுற்றுலா மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலாவை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2025

ஆடு,மாடு,பூனைக்கு வரும் ஏப்.முதல் கட்டணம் வசூல்

image

ஆடு, மாடு, நாய் ஆகிவை வளர்க்க உரிமை கட்டணம் வசூலிக்க மதுரையில் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் வரும் மதுரை நகரில் ஏப்ரல் முதல் ஆடு, மாடு, நாய், பூனை, குதிரைக்கு புதுப்பிக்கப்பட்ட உரிமம் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா தெரிவித்துள்ளார். *செல்ல பிராணி, கால்நடை வளர்ப்போருக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News March 26, 2025

456 காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – ஆட்சியர்

image

காச நோய் காற்றில் பரவும் தொற்றுநோய் ஆகும் மற்றவருக்கு நுரையீரலை பாதிப்படைந்து காச நோய் பரவக்கூடும் இதுவரை காச நோயாளிகளாக 27% இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை காச நோயாளிகளின் நண்பன் திட்டத்தால் மதுரை மாவட்டத்தில் காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னார்வலர்களின் மூலம் 456 காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று விழிப்புணர்வு விழாவில் தெரிவித்தார்

News March 26, 2025

துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் – டிஎஸ்பி மிரட்டல்

image

உசிலம்பட்டி வக்கீல்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் கனி ராஜன் கடந்த 8-ந்தேதி பெண் ஒருவரின் காரை அபகரித்துக் கொண்டவர்கள் மீது புகார் அளிப்பதற்காக அந்த பெண்ணுடன் சென்றார். அப்போது தரக்குறைவாக பேசி சுட்டுவிடுவேன் என உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மிரட்டியுள்ளார். புகார் அளிக்க சென்றவர்களை சுட்டு விடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் காவலர் விரிவாக பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

News March 25, 2025

மதுரை: சாலைகளில் சாகசமா ? காவல்துறை வைத்த செக்!

image

மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாகவே சாலையில் சிலர் பைக் ரேஸ், சாகசங்கள் செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்தநிலையில் மதுரை மாநகரில் சாலை விதிமீறல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க 8300021100 என்கிற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகைப்படம் எடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதியின் பெயரை குறிப்பிட்டு அனுப்பலாம்  என காவல்துறையினர்  வேண்டுகோள் வைத்துள்ளனர்.

News March 25, 2025

மதுரைக்கு புதிய டிஐஜி நியமனம்

image

மதுரை காவல் சரகத்தின் டிஐஜி பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்த நிலையில் ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த அபினவ் குமார் மதுரை சரக டிஐஜி யாக நியமனம் செய்து உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் பத்து டிஐஜிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2025

மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!