India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நர்ஸிங் அசிஸ்டன்ட் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 18 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். <
மதுரை: ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், சித்திரை திருவிழாவில், மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதிகள்,சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விளம்பர நோக்கில் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் 26.04.2025 அன்று ஓவிய பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. இவ்வாய்ப்பினை 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், 26.04.2025-அன்று நடைபெறவுள்ள ஓவிய பயிற்சி பட்டறை குறித்து கூடுதல் விவரங்களை கலை பண்பாட்டு துறையை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
மதுரையில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்
▶சமணர் மலை
▶திருமலை நாயக்கர் அரண்மனை
▶மீனாட்சி அம்மன் கோயில்
▶வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்
▶இடைக்காட்டூர் தேவாலயம்
▶அழகர் கோவில்
▶திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
▶காசிமார் பெரிய மசூதி
▶காந்தி நினைவு அருங்காட்சியகம்
▶புது மண்டபம்
▶செயிண்ட் மேரி கதீட்ரல்
மதுரையில் உள்ள இந்த இடங்களுக்கு செல்ல விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
தமிழகத்தில் போலீசாருக்கு சங்கம் இல்லாதது ஏன்’ என உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறையினருக்கு வார விடுப்பு வழங்கும் உத்தரவை அமல்படுத்த கோரி காவலர் மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில் குமார் தாக்கல் செய்த மனுவில், போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு எவ்வகையில் பின்பற்றப்படுகிறது’ என தமிழக டி.ஜி. பி., பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்.25 நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் PG படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த<
மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் 36. நேற்று மாலை ஷேர் ஆட்டோவில் மகபூப்பாளையம் பகுதியில் செல்லும் போது அவர் வந்த ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதி விபத்தானது. அதில் ஆட்டோவின் ‘சைடு மிரர்’ உடைந்து, அதைச் சுற்றி இருந்த தகடு ‘கட்’ ஆகி, ஆட்டோவில் இருந்த மாரியம்மாள் கழுத்தை கிழித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவில் பயணம் செய்வோருக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க சொல்லுங்க.
மதுரை மாநகர் காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட தல்லாகுளம், தெப்பக்குளம், அவனியாபுரம்,தெற்கு வாசல்,திலகர் திடல், உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தொடர்பான விவரங்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை உலகனேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அபினேஷ் (வயது 27)நேற்று இரவு வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த போது மதுபோதையில் அங்குவந்த சிலர் அபினேசுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அக்கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முகம் மற்றும் உடலில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.ரத்தவெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த அபினேஷ் உயிரிழந்தார். உடலை மீட்டு கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.
மதுரையில் ஏப்.29 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து , மே.8 திருக்கல்யாணம், மே.9 தேரோட்டம், மே.10 கள்ளழகர் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே.12 இல் நடைபெற உள்ளதால் அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.உங்க ஊர் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
Sorry, no posts matched your criteria.