India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாநகராட்சியில் CITIIS 2.0 பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் விபரங்களை www.maduraicorporation.co.in மாநகராட்சி என்ற இணையதள முகவரியில் இப்பணிக்கு விண்ணப்பம் விரும்புவோர்கள் எதிர்வரும் 03.04.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மதுரையில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 3 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிப்.2ல் குடும்ப பிரச்சினையில் நாகையாபுரம் காவல் நிலைய காவலர் சிவா வெட்டி கொலை செய்யப்பட்டார். மார்ச் 18ல் காளையார் கோவில் தனிப்படை காவலர் மலையரசன் ஆட்டோ ஓட்டுநரால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற சுகாதார நிலையங்களில் மகப்பேறு மரண விகிதம் 2023-2024-ஆண்டுகளில் 39.70% இருந்தது. மாநகராட்சியின் உரிய நடவடிக்கையினால் 2024-2025-ஆம் ஆண்டில் 21.60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிசு மரண விகிதம் 2023-2024-ஆம் ஆண்டுகளில் 7.8% இருந்தது. மாநகராட்சியின் உரிய நடவடிக்கையினால் 2024-2025-ஆம் ஆண்டில் 6.18% ஆக குறைக்கப்பட்டுள்ளது என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தகவல்.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலர், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக உள்ள க.சகுந்தலா உட்பட 4 பேரை பதவி நீக்கம் செய்துள்ளார். சட்ட வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படுவோரை நீக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதால் பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகர்மன்றதலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே அமைந்துள்ளது ஆதிமூர்த்தி சிவன் கோவில். இந்த கோவிலில் மட்டும் தான் சிவன் நாக வடிவில் உள்ளார். கோவில் பங்குனி திருவிழா சமயங்களில் சிவனுக்கு உருவம் அமைத்து இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். பங்குனி சிறப்பு நாட்களில் இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் பணவிரயம் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். பணக்கஷ்டத்தில் வாடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது . இதில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி மதுரையில் 24 பள்ளிகளில் 75லட்சம் மதிப்பில் அதிநவீன படிப்பகங்கள் அமைக்கபட உள்ளது. மாட்டுத்தாவணியில் 3கோடி மதிப்பில் உணவுத் தெரு அமைய உள்ளது. 10 கோடி மதிப்பில் 2 அறிவியல் பூங்கா ,8 இடங்களில் “நம்ம மதுரை” செல்ஃபீ பாய்ண்ட் அமைய உள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கு ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை குறைந்த செலவில் நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாதாந்திர பயிற்சிக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்படும். www.sdat.in.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்வது அவசியம். வல்லுநர்கள் மூலம் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. முதல் நாள் மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கிலம் ஏப்ரல் 4-ம் தேதி மொழிப்பாடம் ஏப்ரல் 7-ஆம் தேதி கணிதம் ஏப்ரல் 11-ல் அறிவியல் ஏப்ரல் 15 இல் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 486 பள்ளிகள் சேர்ந்த 38,483 பேர் பத்தாம் வகுப்பு எழுதவுள்ளனர்.
மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக 2003-இல் மோதல் துவங்கியது. 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் தற்போது வரை நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத் அருகில் உள்ள காச்சிகுடா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கும் சென்று வரும் என தெற்கு இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.