India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 469 ரூபாய் ரூபாய் பணமும், 50 கிராம் தங்கமும், 74 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் தகவல்.
மதுரை கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளுக்காக பந்தல்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டை நிறுத்தி சில பகுதிகள் அகற்றப்பட்டன. இதனால் பந்தல்குடி கழிவுநீர் நேரடியாக வைகையாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேம்பாலப் பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட பந்தல்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.1 கோடியில் மீண்டும் சீரமைக்கப்படவுள்ளது.
▶️மதுரை வடக்கு வட்டாட்சியர்-0452-2532858
▶️மதுரை மேற்கு-0452-2605300
▶️மதுரை தெற்கு-0452-2531645
▶️மதுரை கிழக்கு-0452-2422025
▶️திருப்பரங்குன்றம்-0452-2482311
▶️வாடிப்பட்டி-04543-254241
▶️மேலூர்-0452-2415222
▶️கள்ளிக்குடி-04549-278889
▶️உசிலம்பட்டி-04552-252189
▶️திருமங்கலம்-04549-280759
▶️பேரையூர்-04549-275677
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இதைதொடர்ந்து இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவில், மேலும் 102 பள்ளிவாசல், தர்காக்களில் 368 போலீசாரும், 21 கோயில்களில் 174 போலீசாரும், திருப்பரங்குன்றம் மலையில் 41 போலீசாரும், 8 சர்ச்களில் 18 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை : அரிசி மாவு, கேழ்வரகு மாவிற்கான ‘அக்மார்க்’ அங்கீகாரத்தை மத்திய அரசு முதன்முறையாக வழங்கியுள்ள நிலையில், உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மதுரை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் மாவு வகைகளை ஆய்வகத்தில் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெற கூடுதல் விவரங்களுக்கு 96292 88369 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தனியார் நாளிதழ் – ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஏப்.27 காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96777 60856 என்ற அலைபேசி எண்ணில் இன்று மாலை (ஏப்.23) 5 மணிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.
குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் 3 தளங்களுடன், அதிநவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு ரூ. 20 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தில் தனித்துவம் மிக்க குழந்தைகள் சிகிச்சைப் பிரிவாக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் குழந்தைகளுக்கான அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 பணியாளர், 4 குறு அங்கன்வாடி பணியாளர், 152 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்.23) கடைசி நாள். <
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள அறிக்கையில்; ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் துணிகள் உலர்வதை மின் அல்லது மின் இழுவை கம்பிகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கட்டிட பணி நடைபெறும் போது உயர் தாழ்வழுத்த மின் பாதைகள் போதிய இடைவெளி விட்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். உயரமான இரும்புக் கம்பிகளை மின் பாதை அருகே பயன்படுத்த வேண்டாம் என்று தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி) சார்பில் 7 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் பங்கேற்கலாம்.மதுரை மாவட்ட அளவிலான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, வாலிபால் என மே 7ல் மாணவர்களுக்கும், மே 8ல் மாணவிகளுக்கும், காலை 7 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தேர்வு நடக்கிறது. இதற்காக வரும் 5க்குள் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.