India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் வாக்கு பதிவு மையத்துக்கு அலுவலர்கள் இன்று வாக்கு பதிவு இயந்திரத்தை கொண்டு சென்றனர். சுமார் 15 கிலோமீட்டர் மலைப்பாதையில் வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்களை தலைச் சுமையாக தூக்கிக் கொண்டு நடைபயணமாக சென்ற அதிகாரிகள் பின்னர் அங்குள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அமைத்தனர்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் சுமார் 15 லட்சம் பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர். மக்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் 5500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு மன்னர் திருமலை நாயக்கர் மஹாலை பொதுமக்கள் சுற்றி பார்க்க இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் மஹாலை பார்த்து ரசித்தனர். மேலும் நாளை தேர்தல் என்பதால் மஹாலில் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. மேலும் நாளை வெயிலின் தாக்கம் இதே அளவு அல்லது இதற்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் பகல் நேரங்களில் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது காவல்துறை பாதுகாப்பு, குடிநீர், கழிவறை உள்ளிட்டவைகளை முறையாக செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்னரே விதிகளை மீறி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் அனுமதி கோரிய நிலையில் அந்த ஆணையம் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. இக்குழு அனுமதி வழங்கும் முன்னரே விதியை மீறி எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குஜராத் மாநில தலைநகர் அஹமதாபாத் வழியாக இயக்கப்படும் மதுரை – ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (09520) மே 6 முதல் ஜுன் 24 வரை இயக்கப்படும் என மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெற மதுரை மக்கள் தேவையான ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறியிருப்பதாவது, நாளை ஓட்டுப்பதிவு அன்று 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட ஏதுவாக மதுரையில் அரசு நகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.