Madurai

News April 20, 2024

ஜபல்புர் , மதுரை இடையே சிறப்பு ரயில்

image

கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க, மதுரை, ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) மதுரையில் இருந்து ஏப்ரல் 20, 27, மே 04, 11, 18, 25, ஜுன் 01, 08, 15, 22, 29, ஜுலை 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 07.40 மணிக்கு ஜபல்பூர் சென்று சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 20, 2024

மதுரையில் தொடர்ந்து குறைந்து வரும் ஓட்டுப்பதிவு

image

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மதுரையில், கடந்த 3 தேர்தல்களில் பதிவானதைவிட இந்த முறை குறைவாகவே (61.95%) வாக்கு பதிவாகியுள்ளது. 2009 இல் 77.43 %, 2014 இல் 67.74 %, 2019 இல் 66.02 % இருந்த ஓட்டுப்பதிவு இம்முறை 63.92% ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மாநில சராசரி (72%) யை விட குறைவாகும்.

News April 20, 2024

வைகை அணை அருகில் குளித்த இருவர் பலி

image

மதுரை, ஆண்டிபட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வைகை அணை அருகிலுள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். சித்திரை திருவிழாவிற்காக அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தண்ணீர் வரத்து அதிகரித்து சுழலில் சிக்கிய இருவரும் ஆற்றில் மூழ்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.

News April 20, 2024

காதில் பூ வைத்து வந்த இளைஞர்..!

image

மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்த முனீஸ் பாண்டி என்ற இளைஞர் நேற்று வாக்கு செலுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு அவரது வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, ஏற்கனவே அவரது வாக்கினை பெண் ஒருவர் செலுத்தி இருந்ததை கண்டு இளைஞர் முனீஸ் பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் இளைஞர் தன் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன முறையில் தான் ஏமாற்றப்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

News April 19, 2024

மதுரையில் அதிகரித்த வாக்கு சதவீதம்!

image

மதுரை மக்களவை தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்களிக்க காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 7 மணி வரை வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது. இன்று 68.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 67.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், கடந்த தேர்தலில் ஒப்பிடுகையில் 1.11 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

News April 19, 2024

ஆம்புலன்சில் வந்து வாக்கு செலுத்திய 99 வயது பாட்டி

image

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர் லீலா(99). இவர் வேறு பகுதியில் உள்ள மகள் வீட்டில் உள்ளார். தனது தொகுதிக்கு சென்று ஓட்டு போட விரும்பிய இவர், தமது மகள் மூலம் அமைச்சர் பிடிஆர்-க்கு இன்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்பட்ட லீலா பாட்டி, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

News April 19, 2024

நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது வாக்கு- அமீர்

image

மதுரை அம்பிகா கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், இயக்குநர் அமீர் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் அமீர், ‘ஒரு நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பது வாக்கு தான். வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை. அந்த வகையில் என்னுடன் வாக்கை நான் செலுத்தி விட்டேன்’ என்றார்.

News April 19, 2024

வாக்களித்ததை போட்டோ எடுத்து வெளியிட்டு! சர்ச்சை

image

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்களித்த ஒருவர் அதனை போட்டோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News April 19, 2024

வாக்கு செலுத்திய சாலமன் பாப்பையா

image

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரப்பாளையம் ஞான ஒளி புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பட்டிமன்ற நடுவர் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையா தனது குடும்பத்துடன் வாக்கு சாவடிக்கு வந்து வாக்கினை செலுத்தினார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றிய அலுவலக சாலமன் பாப்பையா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News April 19, 2024

மதுரையில் முதல்முறையாக சூப்பர் அறிவிப்பு!

image

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை விழாவில் முதன்முறையாக பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் சித்திரை திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 மற்றும் 0452-2526888 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!