India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பின்னர் 3 நாட்களுக்கு பின் 20 அம் தேதி கடை திறக்கப்பட்ட நிலையில் மது பிரியர்கள் மது வாங்க குவிந்தனர். இதனால் ஒரே நாளில் மதுரை மண்டலத்தில் ரூ.59 கோடியே 74 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து தமிழக அளவில் மதுரை மண்டலம் 3 ஆம் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி வீதியுலாவின் போது ஆயிரக்கணக்கான சிறுமியர் மீனாட்சியம்மன் வேடமணிந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு மீனாட்சியம்மன் வேடமணிவித்து அவரை அம்மன் வீதி உலாவின்போது ஊர்வலமாக அழைத்து சென்றார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் திருக்கல்யாண மேடையில் மணமகள் கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முத்து கொண்டை, மாணிக்க மூக்குத்தி, தங்கச்சடை, நலப்பதக்கம், பச்சைக்கல், மரகதப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார். பல்வேறு அலங்காரத்தில் மணக்கோலத்தில் வீற்றிருந்த மீனாட்சியம்மனுக்கு வைர மாங்கல்யம் அணிவித்தார் சுந்தரேஸ்வரர்.
சென்னையில் இருந்து அழகர் கோவிலுக்கு வந்து, கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்வினை தரிசித்து விட்டு, மீண்டும் சென்னையை நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் திரும்பி கொண்டிருந்தனர். மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது, கருங்காலக்குடி அருகே கம்பூரைச் சேர்ந்தவரின் கார் ஒன்று இந்த காரின் பின்புறமாக மோதியது. இதில் காரில் வந்த 5 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக கள்ளழகர் இன்று மாலை அழகர் மலையிலிருந்து புறப்பட்டார். கள்ளழகர் திருக்கோலம் ஏற்று தங்க பல்லக்கில் பவனி வரும் கள்ளழகருக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் உற்சாகம் பொங்க வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று இரவில் அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டகப் பணிகளில் எழுந்தருள உள்ளார்.
கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(32)க்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத் தேவன் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு நவீன்குமார் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டது. இது குறித்து கீழவளவு போலீசார் வெள்ளையத் தேவன், மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், பாலு ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வெள்ளைய தேவன் மற்றும் அசோக்கை இன்று கைது செய்தனர்.
கள்ளிக்குடி அருகே தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் இங்கு நடத்திய ஆய்வு முடிவு குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கெமிக்கல் கழிவுகளோ , மருத்துவக் கழிவுகளோ கையாளப்படவில்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வருகிறது என தெரவிக்கப்பட்டுள்ளது.
மேலூர் அருகே கீழவளவு பகுதியில் காரில் நின்று கொண்டிருந்த நவீன்குமார் என்பவர் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் டிபன் பாக்ஸ் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கையில் காயமடைந்த நவீன்குமார் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதில் அரசு விதிமுறைகளை மீறியது, தேர்வு எழுதிய மாணவர்களின் 350க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் காணாமல் போனது, போன்ற பல்வேறு காரணங்களுக்காக, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர். டி. தர்மராஜை பதவி நீக்கக் கோரி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு, ‘MKU பணியாளர்கள் சங்கம்’ சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலில் நாளை (ஏப். 21) முதல் 24ஆம் தேதி வரை 4 நாட்கள் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.