India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சர்ச்சையான போஸ்டர் அச்சடித்து ஒட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் பாஜக முக்கிய நிர்வாகிகளான வெற்றிவேல், சசிகுமார், சின்னசாமி, சின்ன இருளப்பன் ஆகியோர்கள் தேர்தல் பணிக்குழு மூலம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை அழகர் மலையிலிருந்து கடந்த 21 ஆம் தேதி புறப்பாடான கள்ளழகர் 23 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளினார். இந்நிலையில் நேற்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை பூ பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலைக்கு புறப்பட்டார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க அழகரை மனமுருக வழியனுப்பி வைத்தனர்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், மதுரை விமான நிலையத்திற்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
மதுரை தவிட்டுச்சந்தை பழைய மாகாளிபட்டி சாலையைச் சோ்ந்தவா் தனசேகரன் (41). வழக்கறிஞரான இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு வெளியே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராஜா (34) என்பவர் மது போதையில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளார். அதை தட்டி கேட்ட வழக்கறிஞரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த வழக்கறிஞர் அளித்த புகாரில் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு தொடர்பான ஆஃப்களில் பிரபலமான DREAM -11 ஆஃப் பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. DREAM 11 ஆப்பில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள், போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக விளையாடி, பொது மக்களின் பணத்தை ஏமாற்றி வருவதாக, விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (25.04.2024) மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (17). இவரது உறவினர் உதயாவிற்கும் கோசாகுளத்தை சேர்ந்த ராஜேஷ்க்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜேஷ் 13 பேர் கொண்ட கும்பலாக நேற்று இரவு நாகரத்தினத்திடம் உதயாவை எங்கே எனக் கேட்டு, 13 பேரும் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் மதுரை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். தாயின் புகாரை அடுத்து, குழந்தையை கடத்திய 2 பெண்களை 24 மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தனர்.
அலங்காநல்லூரை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வாரம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அதை ஊரைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), என்பவர் பள்ளி சிறுமியை கடத்தி அவரது நண்பர் அறையில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். பிரவீன்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(26). கடந்த வாரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனது காரினுள் இருந்த போது, ஒரு கும்பல் அவர் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது. இதில் அவர் காயம் அடைந்தார். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், இன்று கீழவளவு அசோக்(29), அடைஞ்சன் கண்மாய்பட்டி கார்த்திக்(27), மேலூர் பாக்யராஜ் (37), சிவகங்கை மாவட்டம் கட்டானிபட்டி ராஜபிரபு(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.