India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோழவந்தான் தொகுதியில் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவின் பணிகளை நேற்று வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி நேரில் ஆய்வு நடத்தி, வாகன தணிக்கை பணியை பார்வையிட்டார்.
அவனியாபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முனியசாமி 55.இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்றும் சரி ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்த முனியசாமி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே சின்ன கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரதேவன். குடும்ப சூழல் காரணமாக கடந்த 8மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் அர்மேனியா நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 2 வாரத்திற்கு முன் வீரதேவன் பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர ஆட்சியருக்கு அவரது மனைவி லட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் மார்ச். 25, 26 ஆகிய 2 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிக்கு அனுமதி பெற வேண்டிய ஒற்றைச் சாளர முறை (SINGLE WINDOW SYSTEM ) அறையை இன்று (20.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா பார்வையிட்டார். இதேபோல் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, மதுரை தொகுதியின் வேட்பாளராக டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ‘மன அமைதி, முழுமையான ஆரோக்கியம்’ எனும் தலைப்பில் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை இரண்டு மாதம் கோடைகால யோகா பயிற்சி நடைபெற உள்ளது என காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலா் கே.ஆா்.நந்தா ராவ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேர விரும்புவோா் 99941-23091 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.
மதுரை: மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச்.20) துவங்குவதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சங்கீதா உள்ளார். மதுரை தொகுதியில் போட்டியிட விரும்புவோர் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். இதற்கான தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க <
வாடிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சி மன்ற பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தாதம்பட்டி, ஒட்டான் குளக்கரையில் உள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அறைகள் நேற்று மாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.