Madurai

News April 27, 2024

தமிழக அரசை பாராட்டிய ஐகோர்ட்

image

அனைத்து மத்திய சிறைகளிலும் வழக்கு விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள தொடுதிரை வசதி செய்ததற்காக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை கைதிகளின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகளில் உள்ள இந்த தொடுதிரை இயந்திரம், சிறை கைதிகளுக்கு மிகவும் பயனுள்ளது என்று கூறி பாராட்டியது.

News April 27, 2024

பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

image

சிறுபான்மையினா் மீது அவதூறு தெரிவித்ததாக பிரதமா் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நேற்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்குவாசல் சந்தைப் பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் விஜயராஜன் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

News April 26, 2024

பட்டப்பகலில் கொடூர கொலை

image

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த அருள்முருகன் (29) மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மதியம் விளாங்குடி பகுதியில் நடந்துசென்றபோது அங்கு வந்த மர்ம கும்பல் அருள்முருகனை  அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு கையை தனியாக துண்டித்தனர். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அருள் முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 26, 2024

வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவர் சரண்

image

மேலூர் அருகே கீழவளவில் கடந்த ஏப்.21-ல் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு நடந்தது. இதில் நவீன்குமார் ஆட்டோ டிரைவர் கண்ணன் காயமடைந்தனர். இது தொடர்பாக கீழவளவு போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த வெள்ளையதேவன் (24) இன்று மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை மே 10-ம் தேதி வரை ரிமாண்டில் வைக்க நீதிபதி கோகுலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

News April 26, 2024

தமிழக அரசுக்கு அதிரடி: ஐகோர்ட் உத்தரவு

image

மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணல் விற்பனையை ஒழுங்கு படுத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில் மணல் விற்பனை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News April 26, 2024

சிகரெட் கேட்டவருக்கு நேர்ந்த சோகம் 

image

மதுரை சித்திரை திருவிழாவிற்கு விளையாட்டு பொருள் விற்பனை செய்ய வந்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது சலீம்(25). இவர்,  அங்கு 17 வயது சிறுவன் சிகரெட் குடித்தபோது அதனை தருமாறு கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, 17-வயது சிறுவன், சலீமை மதுபாட்டிலால் குத்தியதில் சலீம் காயமடைந்தார். இதையடுத்து சிறுவனை கைது செய்தனர்.

News April 26, 2024

மதுரை நேற்றைய வெப்பநிலை விவரம்

image

மதுரையில் நேற்று (ஏப்.25) 103 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

பாஜகவினர் முக்கிய ஆய்வு கூட்டம்

image

மதுரையில் மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுக் கூட்டம் பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் மதுரை பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் மதுரை நகர் தலைவர் திரு மகா சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வாக்கு பதிவின் போது தங்கள் கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு, வாக்கு சதவீதம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

News April 26, 2024

மதுரை மக்களே இன்றே கடைசி நாள்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்கள் நிகழ் நிதியாண்டுக்கான காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கு வெள்ளிக்கிழமை (ஏப்.26) கடைசி நாள் என மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் க. வாஞ்சிநாதன் அறிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பணியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News April 26, 2024

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிக்கல்

image

மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச். டி, வாய்மொழித் தேர்வு (வைவா ) முடித்தும், சிண்டிகேட் ஒப்புதல் கிடைக்காததால் 190 Ph.D மாணவர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர். தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 4000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. UGC வழிகாட்டுதல்படி இப்பணிக்கு Ph.D அவசியம்.

error: Content is protected !!