India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ராமர் மகன் அருள்முருகன் (28) நேற்று முன்தினம் விளாங்குடி கணபதி நகரில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கொலை செய்த காமராஜர் சாலையை சேர்ந்த காளி ஆனந்த், நாகார்ஜூன், அருண்குமார் ஆகிய 3 பேரை நேற்று இரவு கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை யா. ஒத்தக்கடையைச் சோ்ந்த 18 வயது பூா்த்தி அடையாத சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், அவருக்கு 2 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் திடீரென உடல்நிலை பாதிப்புக்குள்ளான குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் மதுரை சித்திரை திருவிழா வீடியோவை பகிர்ந்து, “மதுரையில் இந்துத்துவாவின் பலம் வெளிப்படுகிறது” என்று கூறி இருந்தார். இதற்கு அமைச்சர் பிடிஆர், ” உங்கள் மாற்றுப் பிரபஞ்சத்தில் கூட அது உண்மையாக இருக்காது. இது மீனாட்சி தேவியின் சக்தி, உங்கள் மதவெறி வழிபாட்டில் பயன்படுத்த தெய்வீகமான ஒன்றை அபகரிக்க வீண் முயற்சியில் ஈடுபடாதீர்கள் ” என பதிலளித்துள்ளார்.
வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று, நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். உசிலம்பட்டியில் இன்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை எதிர்க்கட்சியாக இருந்து பழனிச்சாமி மக்களுக்கு சேவை செய்து வருவதாக தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் இன்று முதல் மே.1ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும். வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம். வெளியில் செல்லும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குடை மற்றும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழும்பூர் – நாகர்கோவில் இடையே செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வண்டி எண் (06067) எழும்பூர்- நாகர்கோவில் வாரந்திர வந்தே பாரத் சிறப்பு ரயில் மே.2ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எழும்பூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06057) சேவையும், மே.3ஆம் தேதி முதல் ஜூன்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் தலைமையில் இன்று பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
மதுரை நகரம் மற்றும் விமானநிலையம் முறையே நேற்று (ஏப்.26) 102.56 மற்றும் 102.2 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மதுரை மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மதுரை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்பு பூத் சிலிப் விநியோகத்தை அரசியல் கட்சிகள் செய்தன. அதில் எல்லோருக்கும் பூத் சிலிப் கிடைத்தது. தற்போது அரசு ஊழியர்கள் மட்டுமே பூத் சிலிப் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இந்த பணி சரிவர நடைபெறவில்லை. 55% முதல் 60% வரை மட்டுமே வழங்கப்பட்டது. எனவே பூத் சிலிப் விநியோக முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை தடநாச்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் சிலர் நடனமாடியுள்ளனர். அதை மற்றொரு தரப்பினர் தடுத்தபோது இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், பாட்டில் கம்பு ஆகியவற்றால் மாறி மாறிதாக்கி கொண்டதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பைச் சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.