India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் 884 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-பிரியா தம்பதி கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த இரு குடும்பத்தாரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு குடும்பத்தினரும் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்டதில் இருவருக்கு மண்டை உடைந்தது. இது குறித்து இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி (65). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கண்டுகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை, அவனியாபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் சைனீஸ் உணவுத் திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உணவு திருவிழாவில் “மடிராகன் ஃபீஸ்டா” என்ற தலைப்பில் 1000 ஆண்டுகள் பழமையான உணவுகளை இன்றும் சமைத்து அசத்தியுள்ளனர். சைனா நாட்டை சேர்ந்த பாரம்பரிய சுமார் 200 வகையான உணவுகளை சமையல் வல்லுநர்கள் சமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் இன்று முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கு மேற்பட்ட பறக்கும்படை குழுவினர் அனைத்து வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குறித்து பலத்த சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 26 லட்சத்து 77 ஆயிரத்து 220 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 13, 61,094 பெண் வாக்காளர்களும், 13,15,866 ஆண் வாக்காளர்களும், 260 மூன்றாம் பாலினித்தவர்கள் என 26,77,220 பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொது இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் சார்ந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்களை அனைத்து இடங்களிலும் அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மதுரையில் விதிகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது போக்குவரத்து மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து 10 இடங்களில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் 15, காப்பீடு செய்யாமை 21, வாகனத்தில் அதிக உயரம் 37, சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றுதல் 39, இதர வழக்குகள் 189 என மொத்தம் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் ரூ.2,68,500 விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.