India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராம சீனிவாசன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அதில் அவரது சொத்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் சொத்துக்கள் 2.48 கோடி உள்ளதாகவும், அசையா சொத்துக்கள் ராம சீனிவாசன் மற்றும் அவரது மனைவி பெயரில் 1.02 கோடி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுரை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான சங்கீதாவிடம் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அருகில் மகளிர் பாசறை சாராள், இளைஞர் பாசறை சாகின் பாத்திமா மற்றும் வழக்கறிஞர் பாசறை விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.
தேர்தல் பணிகளில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஒதுக்கீடு உத்தரவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு சூப்பர்வைசர் பணியும், முதுகலை ஆசிரியர்களுக்கு உதவியாளர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் சீனியர், ஜூனியர் ஈகோ யுத்தம் துவங்கியுள்ளது.
ஆசிரியைகளை அவர்கள் சேலை கலரைக் குறிப்பிட்டு மைக்கில் அழைப்பது வேறு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என்றனர்.
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் அவரது சொத்து மதிப்பு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அவரது பெயரில் அசையும் சொத்து 6.75 கோடியும், அவரது துணைவியார் பெயரில் 3 கோடி இருப்பதாகவும், அசையா சொத்து அவர் பெயரில் 4.48 கோடியும், துணைவியார் பெயரில் 3.13 கோடியும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மாநகரில் இறுதி ஊர்வலத்தின்போது போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும், இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பேனர் நிறுவக்கூடாது, மலர்வளையம், பூமாலைகள் சாலை, வாகனங்களின் மீது தூவக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை மீறி மக்களின் பாதுகாப்பிற்கும், உயிருக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 16ஆவது அனைத்து இந்திய காவல்துறை இறகுபந்து போட்டி நடைபெற்றது. 29 மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பங்கேற்ற இப்போட்டியின் தமிழக அணி சார்பாக மதுரை மாநகர
ஆள்கடத்தல், மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா தங்கப்பதக்கம் வென்றார். காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த கணேசன் மகன் சேதுபதியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர் 2018ஆம் ஆண்டு குற்ற வழக்கில் ஈடுபட்டு அதன் பின் தலைமறைவாகி விட்டவர். சுங்கத்துறை அதிகாரிகள் தந்த தகவலை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் போலீசார் சேதுபதியை கைது செய்தனர்.
மதுரை, கே.புதூரைச் சேர்ந்தவர் பாலாஜி. அரசு போக்குவரத்து கழகத்தில், மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியில் இருந்தபோது கொரோனாவால் இறந்தார்.
கணவர், இறந்ததால் கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை கேட்டு, பாலாஜியின் மனைவி ரம்யா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
முதலமைச்சர் ஆணையின் பேரில் ரம்யா நேற்று மதுரை உலகனேரி கிளையில் கண்டக்டர் பணியை ஏற்றுக் கொண்டார்.
மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட நத்தம் பறக்கும் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து சில மாதங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இருவர் இறந்த சோகமும் நடந்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை மூலம் விபத்து நடக்கும் இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இன்று அதிமுகவின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகம் செய்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சரும், தேனி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஆர்.பி.உதயகுமார் கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று அதிமுகவின் ஆட்சிக்கால திட்டங்களை முன்வைத்து தீவிர வாக்கு சேகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.