Madurai

News May 5, 2024

நீட் தேர்வு எழுத வந்த வழக்கறிஞர்

image

தமிழகத்தில் இன்று (மே.5) மதியம் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மதுரை நாராயணபுரம் பகுதியில் உள்ள எஸ்சிவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 50-வயதான வழக்கறிஞர் சந்தானம் என்பவர் நீட் தேர்வை எழுத வந்தார். முதல் முறையாக தேர்வு எழுத வந்துள்ளதாக தெரிவித்த அவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு எழுத செல்பவர்களை முழு சோதனை செய்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.

News May 5, 2024

துவங்கியது நீட் நுழைவு தேர்வு..!

image

மதுரை மாவட்டத்தில் நீட் நுழைவு தேர்வு 13 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 9312 மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் மாணவ மாணவியர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வருகை புரிந்துள்ளனர். மாணவ மாணவியர் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு 2 மணி முதல் துவங்கி மாலை 5.20 மணியுடன் நிறைவு பெருகிறது.

News May 5, 2024

கொளுந்தும் வெயிலால் மின்தடை: மக்கள் தவிப்பு

image

மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் நகா்ப் பகுதிகளில், மிகையான பயன்பாடு காரணமாக மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. சராசரியாக சுமாா் 15 நிமிஷம் முதல் 30 நிமிஷங்கள் வரை இந்த மின் தடை நீடிக்கிறது. கடந்த 15 நாள்களில் அதிகபட்சமாக திருமங்கலத்தில் கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணி முதல் 3.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

News May 5, 2024

மாநகர காவல் துறையினருக்கு மன அழுத்த விழிப்புணர்வு

image

காவல்துறை ஆளிநர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஏற்படுத்த பட்ட ‘மகிழ்ச்சி ‘ திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மதுரை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர காவல் துறை தலைவர் லோகநாதன் தலைமை வகிக்க, போக்குவரத்து துணை ஆணையர் குமார், மனநல மருத்துவர் Dr. ராமசுப்ரமணியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News May 4, 2024

மதுரையில் பிரபல திரைப்பட நடிகை அதிதி

image

பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கவின். இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ்.போஹன்கர் ‘ஜிமிக்கி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிதி ஏற்கெனவே ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகை அதிதி இன்று ‘ஸ்டார் ‘ பட ப்ரோமோஷனுக்காக மதுரை வந்துள்ளார்.

News May 4, 2024

சாலையோரம் மூதாட்டியின் சடலம் மீட்பு

image

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியில் சாலையோரம் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடந்துள்ளது. இதைக் கண்ட கிராம மக்கள் இன்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த உசிலம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு அவர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? வெயிலின் தாக்கத்தின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

மதுரை: சிக்னலில் வெப்பம் தணிக்க பந்தல் அமைப்பு

image

தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் வெப்ப அலை வீசி வருகிறது. மதுரையில் தொடர்ந்து வெப்பம் 42 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 3, சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு வெப்பம் தணிக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

ரோஸ் மில்க் – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

image

மதுரை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயராம பாண்டியன் நேற்று விடுத்த அறிக்கையில், ரோஸ் மில்க் குளிர்பானத்தில் எரித்ரோமைசின் , கார்மோய்சைன் , பான்சீ 4 ஆர் போன்ற நிறமிகள் குறிப்பிட்ட அளவு சேர்க்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதேபோல ‘ரோடமைன் பி, பாஸ்ட் ரெட்’ நிறமிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தெரிந்தால் கடைக்கு ‘சீல்’ வைப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என்றார்

News May 4, 2024

மதுரையில் நாளை முதல் துவக்கம்!

image

மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றத்தின் சார்பில், கோடைகால கலை பயிற்சி முகாம் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஓவியம், பரதம், பாட்டு மற்றும் சிலம்பம் ஆகியவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள 98425 96563 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News May 4, 2024

மதுரைக்கு 213 புதிய பேருந்துகள் தயார்!

image

மதுரையில் இயங்குவதற்காக 133 டவுன் பேருந்து உட்பட 213 புதிய பேருந்துகள் தயாராகி வருவதாக அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த நிதி ஆண்டில் 350 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருவதாகவும்,மேலும் 213 புதிய பேருந்து வடிவமைக்கப்பட்டு வருவதால் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்

error: Content is protected !!