Madurai

News April 1, 2024

பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவன்  தற்கொலை

image

மேலூர் திருவாதவூரை சேர்ந்தவர் வெங்கடேசன், மகன் ஹரிஷ் பாண்டி(18). பிளஸ் டூ மாணவரான இவர் தேர்வு எழுதிய நாளில் இருந்து தேர்வு முடிவை எண்ணி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஒரு மணி அளவில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.

News April 1, 2024

மதுரை; திருக்கல்யாண விழாவை காண முன்பதிவு

image

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருக்கல்யாணத்தை காண, தரிசன டிக்கெட் பெறுவதற்கான ஆன்லைன் பதிவு வரும் (09.04.24) அன்று தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 1, 2024

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்

image

மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவின உச்சவரம்பு ரூ.
95 லட்சம் என்பதால் அந்தத் தொகைக்குள் செலவினங்களை வரைமுறைப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 1, 2024

மதுரை வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி பிரச்சாரம்

image

மதுரை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து, பிரபல நடிகை ரோகிணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து இன்று மற்றும் நாளை மதுரை முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 1, 2024

மதுரை, உள் நோயாளிகளுக்கு தபால் வாக்கு வழங்க கோரிக்கை

image

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சி. எம். செய்யதுபாபு , மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, ஆட்சியர் சங்கீதாவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “100 சதவீதம் வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் தபால் வாக்குரிமை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

News April 1, 2024

மதுரை: இளைஞர் மர்மமான முறையில் மரணம்!

image

மதுரை வடக்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் நாராயணன்(30). இவர் நேற்று முன்தினம் இரவு புரோட்டா சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் தூங்கிய நிலையில் நேற்று காலை உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி விமலா தேவி தன் கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நாராயணன் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2024

அண்ணாமலை என்னுடைய சீலிப்பர் செல்

image

மதுரை கே.புதூரில் மதுரை நாடாளுமன்ற நாதக வேட்பாளர் சத்யாதேவிக்கு ஆதரவாக சீமான் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் ஆற்றிய உரையில் கச்சத்தீவை 10 ஆண்டுகளாக மீட்காமல் தற்போது அண்ணாமலை கச்சத்தீவு குறித்து பேசி வருகிறார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல் அண்ணாமலை எனக்காக. பேசி வருகிறார். உண்மையில் பாஜக அண்ணாமலைதான் எனக்கு. சிலிப்பர் செல் என பேசினார்.

News March 31, 2024

அண்ணாமலை ஒரு கூமுட்டை-செல்லூர் ராஜூ

image

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் ஆங்கிலம் படித்த தமிழர்கள் இன்று வெளிநாடுகளிலும், இஸ்ரோ உள்ளிட்ட விஞ்ஞான கூடங்களில் இருப்பது கூட தெரியாமல் அண்ணாமலை கூமுட்டையாக உள்ளார் எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

News March 31, 2024

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

image

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சங்கீதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரிமான், விராட்டிபத்து, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News March 31, 2024

மதுரையில் தேர்வில் மாற்றம்

image

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 9ம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப்.10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்.22ம் தேதிக்கும், அதேபோல், ஏப்ரல் 12-இல் நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ம் தேதிக்கு மாற்றப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார். ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் கீழ் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!