India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 9 பேரை கீரைத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த அழகு, விக்னேஸ்வரன், இளம்பரிதி, பாரத், அப்பு, காமேஷ் ஆகிய 6 பேர் கொண்ட குழுவையும், மணி, கிளி கார்த்திக், செந்தில் முருகன் ஆகிய 3 பேர் கொண்ட குழுவையும் போலீசார் கைது செய்து, அரிவாள் கத்தி, கயிறு போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா விடுத்துள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாராளுமன்ற தேர்தல் நடக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்காளர்கள் 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்கினை செலுத்தலாம் என அறிவித்துள்ளார். அதன்படி ஆதார் அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 12 வகையான அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என அறிவித்துள்ளார்.
திருமங்கலம் அருகே செங்குளத்தில் வசிக்கும் ரௌடி முத்தையா, சோழவந்தான் அருகே மேலக்காலில் நிகழ்ச்சிக்கு சென்றபோது, விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் முத்தையா தனது நண்பர்களுடன், சித்தார்த்தை சந்திக்க சென்ற போது, மீண்டும் மோதல் ஏற்பட்டு முத்தையா குத்தி கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வு மதுரை மாவட்டத்தில் 145 மையங்களில் நடைபெற்றது. 488 பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்து 37 மாணவர்கள், 18 ஆயி ரத்து 317 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 354 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 522 மாணவர்கள், 489 மாணவிகள் என மொத்தம் 1011 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரையில், வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.56 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சமயநல்லூரை சேர்ந்த ரத்தின செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மருமகள் வீட்டை விட்டு சென்றவர் மற்றோருவரின் சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி, கணவருடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதை தவறான தகவலளித்து வழக்கு தொடுத்த ரத்தின செல்விக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டது
மதுரை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தானியங்கி ஒலிப்பான் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இன்று தொடங்கி வைத்தார். அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி ஒலிப்பான் பொறுத்தப்பட உள்ளது.
உசிலம்பட்டி அருகே சீமானத்து கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (22), ஆனந்த் (38) ஆகிய இருவரும் இன்று கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர். பிரேம்குமாருக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவருக்கு ஆனந்த் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென பிரேம்குமார் நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற முயன்றபோது ஆனந்தும் தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை மீட்டு போலீசார் விசாரணை.
துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஒரு பயணியின் வயிற்றில் கடத்தி வரப்பட்ட ரூ.24,62,400 மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் 2751 வாக்கு சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 16 வேட்பாளர்களின் பட்டியல் மட்டுமே இடம் பெறும். ஆனால் மதுரை தொகுதியில் 21 பேர் போட்டியிடுவதால் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.