Madurai

News May 8, 2024

விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி

image

மதுரையில் இருந்து இன்று காலை ஹைதராபாத் கிளம்பிய விமானத்தில் பயணிகளில் ஒருவரான சாய்சரண் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சாய்சரண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருடன் வந்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் விமான பயணத்தை ரத்து செய்தனர். 20 நிமிட தாமதத்திற்கு பின் விமானம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றது.

News May 8, 2024

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அழைப்பு

image

மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம். வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பிளஸ்-2 அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றமாணவிகள் https://www.tnpoly.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0452-2679940,97109 38012 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு

image

மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் கட்டணத்துடன் கூடிய தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே 13 முதல் 24 வரை நடக்கும் பயிற்சியில் சுத்த தங்கம் கணக்கிடும் முறை, உலோகவியல், கடன் தொகை வழங்கும் முறை, தங்கம் தரம் பார்த்தல் செய்முறை விளக்கம் அளிக்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் 86956 46417 எண்ணில் முன்பதிவு செய்யலாம்

News May 8, 2024

கஞ்சா வழக்கு – சவுக்கு சங்கர் இன்று ஆஜர்

image

பெண் காவல்துறை அதிகாரிகளை தப்பாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அரசு ஊழியரான சவுக்கு சங்கர்.
சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டு, தனி வழக்காக பதிவு செய்யப்பட்டது.
அந்த கஞ்சா வழக்கிற்காக, இன்று, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜராகிறார்.

News May 8, 2024

பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி துவக்கம்!

image

மதுரை தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் இன்று முதல் (மே 8) முதல் 15 வரை பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி துவங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் யோகா பயிற்சியுடன் யோகாவின் பலன்கள் குறித்த இலவச ஆலோசனைகள், இயற்கையான வாழ்வியல் முறை, தியானம், சிறப்பு மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

News May 8, 2024

பின்தங்கியது மதுரை-காரணம் இதுதான்

image

பிளஸ் 2 தேர்வில் மதுரை 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்று கடந்தாண்டை விட 0.65 சதவீதம் தேர்ச்சி சரிவடைந்து மாவட்ட ‘ரேங்க்’கிலும் பின்தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த அரையாண்டு, இரண்டாம் திருப்புதல் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி காட்டிய பெரும்பாலான அரசு பள்ளிகளின் பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News May 8, 2024

மதுரை : பனைமரம் குறித்த விழிப்புணர்வு

image

மதுரை ஆழ்வார்புரத்தில், பள்ளி மாணவர்களுக்காக நடக்கும், கோடை கால பயிற்சி முகாமில்,
சமூக ஆர்வலர் அசோக் குமார், விளையாட்டுடன் கூடிய விழிப்புணர்வு வழங்கிடும் விதமாக, நுங்கு பற்றியும், அதில் இருக்கும் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களை பற்றி விளக்கினார்.
பின்னர், நுங்கு சாப்பிட்ட பிறகு அதில் வண்டி செய்து குழந்தைகளுக்கு விளையாடி காட்டினார்.

News May 7, 2024

நிர்மலாதேவி-நாளை முக்கிய விசாரணை!

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் உதவி பேராசிரியர் நிர்மலா தேவியை கடந்த வாரம் குற்றவாளியாக அறிவித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், தண்டனையை ரத்து செய்ய கோரியும் அதுவரை இடைக்காலமாக ஜாமின் வழங்க கோரியும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

News May 7, 2024

விலை சரிந்த “மதுரை மல்லிகை”…

image

மதுரை மல்லிகை பூ வழக்கமாக கோடை காலத்தில் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் வருகிறது. தற்போது சுப முகூர்த்த தினம் இல்லாமல் பூக்களின் தேவை குறைந்துள்ளதால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்களின் விலை இன்று பல மடங்கு குறைந்துள்ளது. மல்லிகை பூ ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், முல்லை பூ 250 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ 240
பட்டு ரோஸ் 130 ரூபாய்க்கும், விற்பனையாகிறது.

News May 7, 2024

சிறுமியை கடித்துக் குதறிய நாய்கள் – மதுரை வருகை

image

சென்னையில், மாநகராட்சி பூங்காவில், 5 வயது சிறுமியை, புகழேந்தி என்பவர் வளர்த்து வந்த 2 ராட்வெய்லர் நாய்கள் கடித்து குதறின.
அதைத் தொடர்ந்து 2 நாய்களையும் 7 நாட்களில் சென்னையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
தற்போது இந்த 2 நாய்களையும் புகழேந்தி, மதுரைக்கு எடுத்துச் சென்றதாக சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி தெரிவித்தார்.

error: Content is protected !!