India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மதர் குளோப் ரெவல்யூஷனரி ஹேண்ட்பால் அகாடமி சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம் திருநகரில் ஏப்.,10 முதல் மே 31 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6:00 முதல் 9:00 மணி, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடக்கும் பயிற்சியில் 8 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு 82206 67830ல் தொடர்பு கொள்ளலாம் என அகாடமி தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சோழவந்தானை சேர்ந்தவர் சந்தனகுமாா்(27). இவருக்கும், திருமால்நத்தம் வினீத்குமாரின் மனைவிக்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், நேற்று சந்தனகுமாரும் அவரது தந்தை பெருமாளும் பைக்கில் வந்தபோது வினீத்குமார் உள்ளிட்ட 3 கொண்ட கும்பல் சந்தனகுமாரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது. தடுக்க முயன்ற அவரது தந்தை பெருமாள் காயமடைந்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரபல மலையாள நடிகர் ரோனி டேவிட் ராஜ் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மலையாளத்தில் பிரபலமான ரோனி டேவிட் ராஜ் தமிழில் வாயை மூடி பேசவும் என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற 2018 மற்றும் மம்முட்டி நடித்த கன்னூர் ஸ்குவாட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் நாளை மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை மறுநாள் காலை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் தரிசனம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்கூட்டம் நடைபெறும் பழங்காநத்தம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் இன்று முதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரைக்கு விமானம் மூலம் வரும் ஏப்.4ல் வருகை தரும் அமித்ஷா, தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை 6.00 மணிக்கு மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் இராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார். ஏப்.5ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்டப்பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14 வரை தூத்துக்குடியில் இருந்து மாலை 06.25 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 13, 200 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் 2 ஆம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவவர்கள் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (GENERAL OBSERVER) ராஜேஸ்குமார் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அண்ணாமலை தற்போது கச்சத்தீவு சம்பந்தமாக ஆர்டிஐ தகவல் உள்ளது எனக் கூறுகிறார். இதற்கு ஆர்டிஐ தகவல் தேவையா என்ற அவர், மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே என்றார். அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான், அண்ணாமலை எல்லாம் எம்மாத்திரம் என்று ஆவேசமாக பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் வயது மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று வாக்களித்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (02.04.2024) நடிகை ரோகிணி தெற்கு வாசல் மார்க்கெட், பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் மீண்டும் மோடி பிரதமராவதை தடுக்க மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
Sorry, no posts matched your criteria.