India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணிக்கு மதுரை வருகிறார். தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கிவிட்டு நாளை காலை 9 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர், சிவகங்கையில் நாளை காலை 10 மணிக்கு அமித் ஷா ரோடு ஷோ செல்கிறார். அதேபோன்று நண்பகல் 12 மணிக்கு தென்காசியில் ரோடு ஷோ நடத்த உள்ளார். குமரியில் நாளை மாலை 4 மணிக்கு பிரச்சாரம் செய்வார்.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மதுரை மாவட்டத்தில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைத்து எண்ணப்படும் நிலையில் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை செய்யும் தனி தனிஅரங்குகள், தடுப்புகள் அமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, மதுரை சித்திரைத் திருவிழாவில், தண்ணீரில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் சிலா் உயிரிழந்தனா். இதை தடுக்க, 2023ம் ஆண்டு காவல் துறை சாா்பில் தற்காலிக படிகள் அமைக்கப்பட்டன. தற்போது, மதுரை மாநகராட்சி சாா்பில் வைகையாற்றில், ’நமக்கு நாமே திட்டத்தில்’ ரூ. 50 லட்சத்தில் ஆழ்வாா்புரம், ஓபுளா படித்துறை பகுதிகளில் நிரந்தர படிக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் 1-9 ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல்.23-ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 24-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் ஏப்ரல் 23இல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மார்ச் மாதம் வரை வியாழக்கிழமைகளில் சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 25 வரை வியாழக்கிழமைகளில் இயங்கும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை அமித்ஷா தமிழகம் வருகிறார். அதன்பிறகு அவர் மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் காந்திமதி கல்குவாரி நடத்தி வருகிறார். தனது குவாரிக்கு அருகே மதுரை வடக்கு எம்எல்ஏவும், காந்திமதியின் சகோதரரான தளபதியும் குவாரி அமைக்க இருப்பதை அறிந்து சகோதரரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் தாக்கியதாக 3 பேர் மீது காவல் நிலையத்தில் காந்திமதி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்று மதுரை மேலூர் அருகே உள்ள கிராமங்களில், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன். ஊர்மக்கள் உற்சாகமாக மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.
மதுரை சித்திரைத் திரு விழாவையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் போது உயரழுத்த மோட்டார் பொருத்திய பம்பை பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், பாரம்பரிய ஆட்டு தோல் கொண்டு தயாரிக்கப்பட்ட கை பம்புகளை பயன்படுத்த உத்தரவிட்டது. தல்லாகுளம் நாகராஜன் தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.