Madurai

News March 18, 2024

மதுரை வழியாக மேலும் இரு ரயில்கள்

image

தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் அளித்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News March 18, 2024

மதுரை மக்களின் கவனத்திற்கு

image

மதுரை மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை
நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2024

பரத நாட்டிய மாணவிகளுக்கு பாராட்டு

image

மதுரை தெற்கு மண்டலத்திற்குபட்ட சுடலை முத்து பிள்ளை தெரு ஶ்ரீ நாகர்சாமி கோவிலில் இன்று 54ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பாரத நாட்டியமாடி அசத்தினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா நாட்டியமாடிய மாணவிகளை பாராட்டினார்.

News March 17, 2024

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மீது புகாரளிக்க தொலைபேசி எண்கள்

image

தேர்தல் நடத்தை விதிகள் மீறினால் சி – விஜில் மற்றும் சுவிதா ஆகிய மொபைல் ஆப்கள் மூலம் போட்டோ, வீடியோவுடன் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மேலும் 1800-425-5799, 0452 2535374, 0452 2535375, 0452 2535376, 0452 2535377, மற்றும் 0452 2535378 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவும் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

News March 17, 2024

தேர்தல்: தவறான தகவல் பரப்பினால் இதை செய்யுங்கள்!

image

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க மதுரை மாவட்ட காவல்துறையில் 24மணி நேரமும் இயங்கி வரும் காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண்ணை (9498101395) தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் இன்று தெரிவித்துள்ளார். புகார்தாரர் விவரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

துப்பாக்கி வைத்திருப்பவர்களா ? உடனே இதை செய்யுங்கள்!

image

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் 884 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2024

மதுரை: பயங்கர மோதல் – 8 பேர் மீது வழக்கு

image

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-பிரியா தம்பதி கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த இரு குடும்பத்தாரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு குடும்பத்தினரும் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்டதில் இருவருக்கு மண்டை உடைந்தது. இது குறித்து இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 17, 2024

திருமங்கலம் அருகே விபத்து

image

திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி (65). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் திருமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கண்டுகுளம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி இவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 17, 2024

மதுரையில் உணவு திருவிழா

image

மதுரை, அவனியாபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் சைனீஸ் உணவுத் திருவிழா நடைபெற்றது வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உணவு திருவிழாவில் “மடிராகன் ஃபீஸ்டா” என்ற தலைப்பில் 1000 ஆண்டுகள் பழமையான உணவுகளை இன்றும் சமைத்து அசத்தியுள்ளனர். சைனா நாட்டை சேர்ந்த பாரம்பரிய சுமார் 200 வகையான உணவுகளை சமையல் வல்லுநர்கள் சமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

News March 17, 2024

மதுரையில் துவங்கியது சோதனை

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் இன்று முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கு மேற்பட்ட பறக்கும்படை குழுவினர் அனைத்து வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குறித்து பலத்த சோதனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!