Madurai

News April 5, 2024

மதுரையில் ஜிம் உரிமையாளரிடம் பண மோசடி

image

மதுரை கேகே. நகரில் ஜிம் நடத்தி வரும் மனோஜ் பாபு என்பவரிடம் ஜவஹா்லால்புரத்தைச் சேர்ந்த ஐசக் அப்பாஸ் தொழில் செய்வதாகக் கூறி முதலீடாக ரூ.57.52 லட்சத்தை பெற்றுள்ளார். பின்னர் ரூ.18 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தராமல் மோசடி செய்துள்ளார்.  இதுகுறித்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் ஐசக் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News April 5, 2024

சு.வெங்கடேசன் மீது வழக்கு பதிவு!

image

மதுரை கொட்டாம்பட்டி அருகே ம.வெள்ளாளப்பட்டியில் கடந்த 3 ஆம் தேதி மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவரை வரவேற்று ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.100 கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரில் சு.வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சியினர் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 5, 2024

மதுரை: சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இக்கோவிலில் பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு நாளை ஏப்ரல் 06ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

News April 5, 2024

குளிர்பானத்தில் கிடந்த ரப்பர் பொருள்!

image

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் இன்று மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது குழந்தைக்கு பிரபலமான குளிர்பானம் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த குளிர்பானத்தில் ரப்பர் போன்ற பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சுகாதார துறையினர் கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 5, 2024

துவங்கியது தபால் வாக்குப்பதிவு!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் தலைமையில் 80 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தி வருகின்றனர். முன்னதாக கணக்கெடுக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களின் தபால் வாக்குப்பதிவை பெற்று வருகின்றனர்.

News April 5, 2024

மதுரை: நண்பரிடம் ரூ.20 லட்சம் மோசடி

image

மதுரை கோ.புதூா் லூா்து தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் பாபு. இவரது நண்பரான ஆலாத்தூா் ஜவஹா்லால்புரத்தைச் சோந்த ஐசக் அப்பாஸ் என்பவரிடம் புரோட்டின் பொடி விற்பனை தொழில் செய்ய கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.20 லட்சத்தை மனோஜ் பாபு கொடுத்துள்ளார். ஆனால், ஐசக் அப்பாஸ் தொழில் ஏதும் செய்யாமல் பணத்தை மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் ஐசக் அப்பாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 5, 2024

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி..!

image

கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகள் வசதிக்காக வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த சென்னை – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை வாரம் மும்முறை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது முதல் ஏப்ரல் 28 வரை வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த ரயில் சேவை தொடர உள்ளதாக மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

News April 5, 2024

கஞ்சா கடத்த முயன்றவர்களுக்கு 10 ஆண்டு சிறை!

image

கடந்த 2018 இல் இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மதுரையைச் சேர்ந்த  ராஜாஜி, பாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் கைதான பாண்டி, ராஜாஜி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News April 5, 2024

மதுரை: விசாரணை கைதி திடீர் சாவு

image

மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த கார்த்திக், வழிப்பறி வழக்கு ஒன்றில் மதிச்சியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

News April 5, 2024

எடப்பாடி பழனிசாமி மீண்டும் மதுரையில் பிரச்சாரம்

image

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 28 அன்று மதுரையில் பிரச்சாரம் செய்தார். தற்போது, தேனியில் பிரசாரம் செய்ய ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு மதுரை வரும் எடப்பாடி, 9 ஆம் தேதி காலை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஓட்டு சேகரிக்கிறார்.

error: Content is protected !!