India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 2005-ஆம் ஆண்டு முதுநிலை வணிக மேலாண்மை படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். தொடா்ந்து, மாணவா்கள் தங்கள் பசுமையான நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். இதில் கல்லூரியின் முன்னாள் மாணவா் அமைப்பின் இயக்குநா் ராஜேஷ் ஒருங்கிணைத்தார்.
மதுரை அருகே சாமிநத்தத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார் (27). பெற்றோரை இழந்த இவர், சகோதரி சுகன்யா வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கன்னியசாமி ஊரணியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குளித்து கொண்டிருந்த அவர் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர், அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி எனவும், எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார் என புகழாரம் சூட்டினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாதுறைகளையும் கைப்பற்றுவார்கள், அதேபோல் சினிமாத்துறையையும் கைப்பற்றியுள்ளதாக விமர்சித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நாளை முதல் வரும் 22ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. வைகாசி வசந்த உற்சவத்தையொட்டி நாளை முதல் 25-ந்தேதி வரை கோவில் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை வைகையாற்றில் சுமார் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் வைகை ஆற்றின் இருகரையும் தொட்டபடி சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையோர சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆபத்தான நிலையில் வாகனங்கள் செல்கின்றன.
வைகை அணையிலிருந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று மதுரை வைகையாற்றை வந்தடைந்தது. இதனால் சிம்மக்கல் ஏ.வி. பாலம் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனுடைய ஆற்றில் இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும் கூடாது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வெற்றி, வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் அக்கட்சியினர் கடந்த மே 17ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி திருப்பரங்குன்றம் முதல் திருநகர் வரை பைக்கில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் பாஜகவினர் 17 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கோ.புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2024ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு வரும் ஜூன்.6 ஆம் தேதி வரை நடைபெறுவதாக தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் ஸ்ரீதேவி அறிவித்துள்ளார். www.skilltraining.tn.gov.in குறித்த மேலும் விவரங்கள் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரையினை நேரில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உசிலம்பட்டி பகுதியில் 6 செ.மீட்டரும், மேட்டுப்பட்டி,கள்ளந்திரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், புலிப்பட்டியில் 4 செ.மீட்டரும், குப்பண்ணம்பட்டி, பெரியபட்டி, திருமங்கலம்,கல்லிக்குடி, சித்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவானது.
ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மதுரை மாவட்ட பள்ளிகளின் வாகனங்கள் நிலை குறித்து, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர். 280 பள்ளிகளைச் சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வாகனங்களின் பராமரிப்புகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.