India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் மே மாதத்திற்கான ரேஷன் பொருள்களான துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் புகாா் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்துக்கான சா்க்கரை, அரிசி மட்டுமே வந்துள்ளதாகவும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படாததால், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
மதுரை, ஆழ்வார் புரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முகமது அலி ஜின்னா(31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில், லோன் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளார்.
நேற்று இவர் தனது வீட்டு முன் ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அப்போது, அவரது ஆட்டோவில் இருந்த பேட்டரியை மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த இப்ராஹிம் (42) என்பவர் திருடிச் சென்றார். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராஹிமை கைது செய்தனர்.
செக்கானூரணி அரசினர் தொழிற்பயற்சி நிலையத்தில் பிட்டர், டர்னர், எலக்ட்ரிசியன், குளிர்பதனம், தட்பவெப்பநிலை கட்டுபடுத்துதல், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை முதல் வரும் 07.06.2024 வரை நேரடியாக வந்து விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று (மே.12) மழைப்பொழிவு பதிவான விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. எழுமலை பகுதியில் 7 செ.மீட்டரும், குப்பணம்பட்டியில் 6 செ.மீட்டரும், உசிலம்பட்டி பகுதியில் 2செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மதுரையில் இன்னும் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை மதுரை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
மதுரையில், மதுரை-தேனி இடையே கீழக்குயில்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது சமர்ண மலை. குன்றான இதில், தமிழிக் கல்வெட்டுக்களும், சமணப் படுகைகளும், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. மகாவீரர் அழகிய கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிற்பமும், அதனை செதுக்கியவரின் விவரமும் வட்டெழுத்துக்களாக உள்ளன. இதில் பல சமண சிற்பங்கலும், துறவிகளின் பெயர்களும் உள்ளன. மேலும் இங்கு கன்னட கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றன.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பாண்டி கோவில் வழியாக செங்கோட்டை சென்று அரசு பேருந்து சென்ற போது முன்னாள் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் வந்த சிவகாசி செல்லும் தனியார் பேருந்து மற்றும் திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்து அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் இரு கரையோரங்களில் உள்ள சாலைப் பகுதியில் யாரும் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் நேற்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான நிலைகள் சாலையை கடந்து சென்றதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.