Madurai

News April 10, 2024

கள்ளழகர் திருவிழா: தண்ணீர் திறக்க திட்டம்

image

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா நடைபெறும் போது, வைகை அணையில் போதுமான நீர்இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு 23-ந் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. தற்போது வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்காக, வைகை அணையில் இருந்து 19ந் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

News April 10, 2024

ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் முன் பதிவு

image

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ.500-க்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு முன்பதிவு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இதனிடையே ஒரே நாளில் 2000 மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 10, 2024

கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

image

மதுரை, வில்லாபுரத்தை சேர்ந்த கனகவேல் தனது குடும்பத்தினுடன் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூமிதி திருவிழாவில் பங்கேற்று விட்டு இன்று காலை மதுரை நோக்கி காரில் வந்துள்ளார். அப்போது கள்ளிக்குடி அருகே சாலையைக் கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

News April 10, 2024

மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

image

மதுரையில் உள்ள மகளிா் கல்லூரியில் நேற்று முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வரும், செயலருமான கிறிஸ்டியனா சிங் தலைமை வகித்து மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். அதைத் தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசினை கல்லூரி முதல்வா் வழங்கி பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசி மகிழ்ந்தனர்.

News April 9, 2024

மதுரையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக மதுரையிலிருந்து ஏப்ரல் 17, 18ம் ஆகிய தேதிகளில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு சராசரியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக (09-04-24) அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

பொய் வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பு

image

தன் மீது பதியப்பட்ட பொய் கஞ்சா கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இன்று தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை காவல் ஆய்வாளர் பூமிநாதன், எஸ்ஐ பேரரசி ஆகியோர் நேர்மையாக நடத்தவில்லை, காவல்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகிறது என்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

News April 9, 2024

சென்னை-நெல்லை கோடை விடுமுறை சிறப்பு ரயில்

image

கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

News April 9, 2024

மதுரை வேளாண் கல்லூரியில் தேனீ வளர்ப்பு பயிற்சி

image

மதுரை வேளாண்மை கல்லூரியின் பூச்சியியல் துறை இணை பேராசிரியா் கி.சுரேஷ் கூறியதாவது, வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் தேனீ வளா்த்தல், தேன் எடுத்தல், தேனிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 10 நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ரூ.590. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் 9965288760 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

News April 9, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.!

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 9, 2024

மதுரையில் தபால் ஓட்டு முகாம்

image

பூத் அலுவலர்கள் ஏப் 13ல் நடக்கும் பயிற்சி முகாமில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏப்.,15 வரை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் தபால் ஓட்டுக்களை வழங்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஏப்.10 கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. அங்கு அவர்களுக்கு ஓட்டுச் சீட்டும் வழங்கப்பட்டு, உடனடியாக ஓட்டுக்கள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!