India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை அருகே நிலையூரை சேர்ந்தவர் செந்தில் மகன் ராகுல்(18). இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவரது தந்தை இறந்து விட்டதால், தாய் ராகுலை வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மனம் வெறுத்த ராகுல் அப்பகுதியில் உள்ள சூரக்குளம் கண்மாய் பகுதியில் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கழித்து கட்டுமான பணிகள் துவங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தற்போது வேகமெடுத்து வருவதாகவும் இதுவரை 13 வகையிலான முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பேரையூரில் 4 செ.மீட்டரும், புலிப்பட்டியில் 3 செ.மீட்டரும், மேலூர், மேட்டுப்பட்டி, பெரியபட்டி ஆகிய பகுதியில் 2 செ.மீட்டரும், தல்லாகுளம், கல்லந்திரி, சித்தம்பட்டி, மதுரை விமான நிலையம், விரகனூர் அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதனிடையே, நேற்று மதுரையில் மழை பெய்தது. இந்தநிலையில், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை(35), மனைவி ஜெயலட்சுமி(28).
நேற்று நாகர்கோவில் செல்வதற்காக திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவை – நாகர்கோவில் ரயிலில் ஜெயலட்சுமி ஏறியபோது ரயில் கிளம்பியது. இதனால் ரயிலில் சிக்கி அவரது இரு கால்களும் துண்டாகின. காப்பாற்ற முயன்ற சிங்கதுரையின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரை, வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அவ்வழியாக உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25), கடந்த 2021 இல் இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் நேற்று மாலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பேசிய அவர், “மத்தியில் நிச்சயம் மீண்டும் 3 ஆவது முறையாக மோடி ஆட்சி அமைப்பார். எனவே, மக்களுக்கான திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொடுப்பதில் பாலமாக செயல்படுவேன்” என தெரிவித்தார்.
மதுரை வாடிப்பட்டி அருகே குட்டிமேக்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது சகோதரியின் மகளான காமாட்சி (17), இவரது வீட்டில் தங்கி கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பாததால் தனது சகோதரியின் மகள் காமாட்சியை கண்டுபிடித்து தர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.