India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில், வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.56 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சமயநல்லூரை சேர்ந்த ரத்தின செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மருமகள் வீட்டை விட்டு சென்றவர் மற்றோருவரின் சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி, கணவருடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதை தவறான தகவலளித்து வழக்கு தொடுத்த ரத்தின செல்விக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டது
மதுரை மாநகர பேருந்துகளில் தானியங்கி ஒலிப்பான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தானியங்கி ஒலிப்பான் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா இன்று தொடங்கி வைத்தார். அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி ஒலிப்பான் பொறுத்தப்பட உள்ளது.
உசிலம்பட்டி அருகே சீமானத்து கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் (22), ஆனந்த் (38) ஆகிய இருவரும் இன்று கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர். பிரேம்குமாருக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவருக்கு ஆனந்த் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது திடீரென பிரேம்குமார் நீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற முயன்றபோது ஆனந்தும் தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உடலை மீட்டு போலீசார் விசாரணை.
துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் ஒரு பயணியின் வயிற்றில் கடத்தி வரப்பட்ட ரூ.24,62,400 மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் 2751 வாக்கு சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 16 வேட்பாளர்களின் பட்டியல் மட்டுமே இடம் பெறும். ஆனால் மதுரை தொகுதியில் 21 பேர் போட்டியிடுவதால் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலூர் திருவாதவூரை சேர்ந்தவர் வெங்கடேசன், மகன் ஹரிஷ் பாண்டி(18). பிளஸ் டூ மாணவரான இவர் தேர்வு எழுதிய நாளில் இருந்து தேர்வு முடிவை எண்ணி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஒரு மணி அளவில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருக்கல்யாணத்தை காண, தரிசன டிக்கெட் பெறுவதற்கான ஆன்லைன் பதிவு வரும் (09.04.24) அன்று தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவின உச்சவரம்பு ரூ.
95 லட்சம் என்பதால் அந்தத் தொகைக்குள் செலவினங்களை வரைமுறைப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து, பிரபல நடிகை ரோகிணி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து இன்று மற்றும் நாளை மதுரை முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.