Madurai

News April 16, 2024

மதுரையில் அதிரடி உத்தரவு

image

மதுரை மாவட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கூடங்கள் 17.04.2024 அன்று காலை 10 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) இரவு 12 மணி வரை மற்றும் 21.04.2024 (மகாவீர் ஜெயந்தி) ஆகிய தினங்களில் மதுபான கடைகள் மூடப்படும் என ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 16, 2024

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்கு சேகரிப்பு

image

மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை கையில் ஏந்தி எப்படி வாக்கு சேகரித்த அவர் தனக்கு வாக்களிப்பவர்கள் எந்த எண்ணில் உள்ள சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வாக்கு சேகரித்தார்.

News April 16, 2024

மதுரையில் இன்றே கடைசி

image

மதுரை மக்களவைத் தொகுதிக்கான
தபால் வாக்கு பதிவுக்கு இன்றுடன் (ஏப்.16) நிறைவு பெறுவதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சங்கீதா அறிவித்துள்ளார். எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் பணியாளர்கள், தபால் வாக்கு செலுத்த தவறிய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இன்று மாலை 5 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 16, 2024

மீனாட்சி திருக்கல்யாணம் 9370 பேர் விண்ணப்பம்

image

மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குப்பட்டது. ரூ.500 டிக்கெட்டில் 6372 பேரும், ரூ.200 டிக்கெட்டில் 2998 பேர் என மொத்தம் 9370 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முதல் டிக்கெட் வழங்கும் பணி துவங்கியது. 

News April 16, 2024

ஸ்தம்பித்த மதுரை! சித்திரை திருவிழா 

image

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இவ்விழாவின் 4-ம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மாலையில் சுவாமி, அம்மன் கோவிலுக்கு புறப்பட்டபோது, வழிநெடுகிலும் சுவாமி அம்மாளை தரிசிக்க லட்சக்கணக்காண பக்தர்கள் திரண்டதால் மதுரை மாநகரமே ஸ்தம்பித்தது.

News April 15, 2024

மதுரை மக்களுக்கு ஆட்சியர் “அலர்ட்”

image

கோடை வெயில் தற்பொழுது அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுக்காப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் சங்கீதா பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி கோடை வெயில் மற்றும் அனல் காற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மதிய வேளையில் குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

News April 15, 2024

கோடைகால சிறப்பு வசதி அறிவிப்பு

image

கோடைக்கால சிறப்பு ரயிலான சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ரயிலில் 2 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பதிலாக இரண்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் சேர்க்கப்படும் எனவும், இந்த பெட்டிகள் மே 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2024

பறிமுதல் செய்த 4 கோடி மதிப்புள்ள நகை ஒப்படைப்பு!

image

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே கடந்த 12ஆம் தேதி உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, நகைகளுக்கான ஆவணங்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து வணிகவரி மற்றும் வருமானவரித்துறையினர் சரிபார்த்த நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இன்று விடுக்கப்பட்டன.

News April 15, 2024

மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள் போராட்டம்

image

மதுரை எய்ம்ஸில் சேர்ந்து பயின்று வரும் இந்தி‌ பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியதாக வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி போராடிய அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் ” என்று கூறியிருக்கின்றனர்.

News April 15, 2024

பகுதி நேரமாக கஞ்சா விற்பனை செய்த நிதி நிறுவன மேலாளர் கைது

image

திருப்புவனத்தில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தில், மதுரை கொடிக்குளம் அலெக்ஸ் பாண்டியன் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
யுகாதி அன்று விடுமுறை என்பதால் வசூலான பணம் ரூ.7,50,000 தலைமறைவானார். நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து மதுரை கீரைத்துறையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்து, பணம் மற்றும் 3 கிலோ கஞ்சாவை இன்று கைப்பற்றினர்.

error: Content is protected !!