Madurai

News April 9, 2024

சென்னை-நெல்லை கோடை விடுமுறை சிறப்பு ரயில்

image

கோடை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லை- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய வியாழக்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் என மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

News April 9, 2024

மதுரை வேளாண் கல்லூரியில் தேனீ வளர்ப்பு பயிற்சி

image

மதுரை வேளாண்மை கல்லூரியின் பூச்சியியல் துறை இணை பேராசிரியா் கி.சுரேஷ் கூறியதாவது, வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் தேனீ வளா்த்தல், தேன் எடுத்தல், தேனிலிருந்து மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 10 நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் ரூ.590. பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் 9965288760 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

News April 9, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.!

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 9, 2024

மதுரையில் தபால் ஓட்டு முகாம்

image

பூத் அலுவலர்கள் ஏப் 13ல் நடக்கும் பயிற்சி முகாமில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏப்.,15 வரை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் தபால் ஓட்டுக்களை வழங்கலாம். தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஏப்.10 கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி முகாம் நடக்க உள்ளது. அங்கு அவர்களுக்கு ஓட்டுச் சீட்டும் வழங்கப்பட்டு, உடனடியாக ஓட்டுக்கள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

பக்தர்களே நாளை முதல் துவக்கம்

image

மதுரை சித்திரை திருவிழாவின் மீனாட்சி திருக்கல்யாண விழா வரும் ஏப்.21ம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. திருக்கல்யாண விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ரூ. 200, ரூ.500க்காண கட்டணச்சீட்டு நாளை முதல் ஏப்.13ம் தேதி இரவு 9 மணி வரை ஆன்லைனில் பெறலாம். இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in மூலம் பெற்றுக்கொள்ளலாம்

News April 8, 2024

மதுரையில் கடும் வெயில்

image

மதுரையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மதுரையில் சில நாட்காகவே 103 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மேலும், வெப்பசலனம் காரணமாக அடுத்த 6 நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 8, 2024

பூட்டிய வீட்டில் ஆண் பிணம் போலீஸ் விசாரணை

image

திருமங்கலம் கக்கன் காலனி ஓடை அருகே ஒரு பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்தபோது வாலிபர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கடந்தது. விசாரணையில் அவர் சுந்தர்(38) கடந்த 8 ஆண்டுகளுக்காக மனைவியை பிரிந்து வாழ்கிறார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 8, 2024

அண்ணாமலை ரெடிமேட் அரசியல்வாதி- ஆர்.பி.உதயகுமார்

image

பாஜகவில் தலைவர் பஞ்சம் ஏற்பட்டதால் ரெடிமேடாக அண்ணாமலை தலைவராக நியமிக்கட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு செல்லும் மற்ற கட்சிகள் அனைத்தும் இரும்பு கடைக்கே செல்லும் என அண்ணாமலை கூறிய கருத்திற்கு இன்று ஆர்.பி.உதயகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.

News April 8, 2024

தேர்தல் பணிக்கு, ஓய்வு பெற்ற காவலர்களுக்கு அழைப்பு

image

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள ஓய்வு பெற்ற காவலா்கள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் தலைவா் போஸ், பொதுச்செயலா் குமரவேல், பொருளாளா் ராஜா சந்திரசேகா் ஆகியோரைத் தொடா்பு கொண்டு, வருகிற 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு ஊதியம் வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது

News April 8, 2024

கொதிக்கும் தேநீரை ஊற்றிய கொடூர சம்பவம்

image

நாகமலை புதுக்கோட்டை அருகே மேலக்குயில்குடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கும் அருகில் தேநீர் கடை நடத்தி வரும் சுந்தரபாண்டிக்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது ஈஸ்வரியின் மகன் தெய்வேந்திரன் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியின் மனைவி பவானி கொதிக்கும் தேநீரை தெய்வேந்திரன் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில், படுகாயமடைந்தவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

error: Content is protected !!