Madurai

News April 12, 2024

இளைஞர் கொலையில் தந்தை மகன் கைது

image

அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர், உறவினரான மணி என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மணி, அவரது மகன் தினேஷுடன் சேர்ந்து நேற்று கார்த்திகை கத்தியால் குத்தி கொலை செய்தார். தொடர்ந்து உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த தந்தை மற்றும் மகனை போலீசார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.

News April 12, 2024

ரயில்வே தண்டவாளத்தில் இளைஞரின் சடலம்

image

மதுரை அருகே சமயநல்லூர் தேனூர் ரெயில்வே கேட் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. தொடர்ந்து, அவர் யார்? ரயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது தண்டவாள பாதையை கடக்க முயன்ற போது பலியானாரா ? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2024

மதுரையில் இன்று அமித்ஷா கலந்து கொள்ளும் வாகனப் பேரணி

image

மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்து கொள்ளும் வாகனப் பேரணி இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News April 12, 2024

மின்னொளியில் ஜொலிக்கும் கோபுரங்கள்!

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோவிலின் கோபுரங்களில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எங்கிருந்து பார்த்தாலும் கோபுரங்கள் மின்னொளியில் ஜொலித்து நிற்கும் ரம்மியமான காட்சிகள் மக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

News April 11, 2024

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரைக்கு வருகை தருகிறார். பிற்பகலில் வரும் அவர் இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

News April 11, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம்

image

மதுரை தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநா் மா.வேலுமணி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களவை தோ்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்.,19 அன்று மதுரை மாவட்டத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மீது 98652 22938, 82484 63905, 99410 12190, 78713 87668, 99445 17244 மற்றும் 0452 2530729 ஆகிய எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

மதுரையில் அமித்ஷாவின் ரோடு ஷோ நடக்கும் பகுதி.

image

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை மதியம் மதுரை வரும் நிலையில், மாலையில் மதுரை-திண்டுக்கல் ரோடு முருகன் கோவிலிருந்து தொடங்கி ஜான்சிராணி பூங்கா, தெற்காவணி மூலவீதி , வழியாக விளக்கு தூண் வரை நடைபெறவுள்ள ரோட் ஷோவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்.
அமித்ஷாவின் ரோட் ஷோவை முன்னிட்டு போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

News April 11, 2024

மோடி, அமித்ஷா மீது காவல் நிலையத்தில் புகார்

image

மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் மனு ஒன்றை இன்று அளித்தார். அம்மனுவில் பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் தேர்தல் பத்திர நிதி வசூல் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 11, 2024

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

image

மதுரை வடக்குவாசல் ஜஹாங்கீர் என்பவர் மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை கைது செய்த மதுரை தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜஹாங்கீருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

News April 11, 2024

புகழ்பெற்ற கல்மண்டபத்தில் சடலம் மீட்பு

image

மதுரை கூடலழகர் கோவில் எதிரே பழமை வாய்ந்த கல் மண்டபம் உள்ளது. இந்த கல் மண்டபத்தில் நேற்று காலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி அங்கு வந்த திடீர் நகர் போலீசார், உடலை மீட்டு இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!