India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. மேலும் நாளை வெயிலின் தாக்கம் இதே அளவு அல்லது இதற்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் பகல் நேரங்களில் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது காவல்துறை பாதுகாப்பு, குடிநீர், கழிவறை உள்ளிட்டவைகளை முறையாக செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்னரே விதிகளை மீறி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் அனுமதி கோரிய நிலையில் அந்த ஆணையம் நேற்று ஆய்வு மேற்கொண்டுள்ளது. இக்குழு அனுமதி வழங்கும் முன்னரே விதியை மீறி எய்ம்ஸ் கட்டுமான பணி துவக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குஜராத் மாநில தலைநகர் அஹமதாபாத் வழியாக இயக்கப்படும் மதுரை – ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி ஓஹா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (09520) மே 6 முதல் ஜுன் 24 வரை இயக்கப்படும் என மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடைபெற மதுரை மக்கள் தேவையான ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கூறியிருப்பதாவது, நாளை ஓட்டுப்பதிவு அன்று 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட ஏதுவாக மதுரையில் அரசு நகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது அழகர் வேடமணிந்த பக்தர்கள் ஆட்டு தோலினாளான பையில் நறுமண நீரை நிரப்பி தங்க குதிரை வாகனத்தில் வரும் கள்ளழகர் மீது பீய்ச்சி அடிப்பர். இவ்வாறு வேடமணிந்து நறுமண நீரை பீய்ச்சி அடிக்கும் பக்தர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்ய வேண்டும் என்ற மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று நாள் மற்றும் மகாவீரர் ஜெயந்தி சேர்த்து மொத்தம் 4 நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படும்.தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் மது விற்பனை உச்சத்தை தொட்டது.அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுரை கோட்டத்தில் 55 கோடியே 84 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
மதுரை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், பயன்படுத்தும் காகிதங்கள் என ஸ்டேஷனரி பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் செல்லும்.
Sorry, no posts matched your criteria.