India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25), கடந்த 2021 இல் இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் பகுதியில் நேற்று மாலை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பேசிய அவர், “மத்தியில் நிச்சயம் மீண்டும் 3 ஆவது முறையாக மோடி ஆட்சி அமைப்பார். எனவே, மக்களுக்கான திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொடுப்பதில் பாலமாக செயல்படுவேன்” என தெரிவித்தார்.
மதுரை வாடிப்பட்டி அருகே குட்டிமேக்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது சகோதரியின் மகளான காமாட்சி (17), இவரது வீட்டில் தங்கி கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பாததால் தனது சகோதரியின் மகள் காமாட்சியை கண்டுபிடித்து தர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மட்டும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “மீண்டும் மோடி வேண்டும் மோடி, ஏப்ரல் 12 மீண்டும் தமிழகம் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ” எனக் குறிப்பிட்டு அமித்ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சந்தான பாரதிக்கும் , அமித்ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் பரப்புரைக்காக இன்று மதுரை வருகின்றனர். இதனால் மதுரை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பார்வையாளர்கள் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் அவசர கால நிலைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் வழிப்பறி வழக்குத் தொடா்பாக மதிச்சியம் போலீஸாரால் கடந்த ஏப். 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஏப். 5-ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இந்நிலையில், காா்த்திக் உடலில் காயங்கள் இருப்பது உடல் கூராய்வு அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரம், அதை சுற்றி உள்ள பகுதியில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து மேளதாளம் மற்றும் சிவச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்ற விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.