Madurai

News May 21, 2024

மதுரை அரசு பொருட்காட்சி ஒத்திவைப்பு

image

மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை முதல் நடைபெறவிருந்த அரசுப் பொருட்காட்சி -2024 கனமழை காரணமாக, நாளை மறுநாள் (23.05.2024) வியாழன் அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News May 21, 2024

மதுரை : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

மதுரை மாவட்டத்தில் நாளை (மே.22) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.

News May 21, 2024

அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழுக்கள்

image

மதுரையில் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறை தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் வரும் கல்வியாண்டு முதல் ஏற்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மாணவரும் பெற்றோர் செல்போன் எண்ணும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

News May 21, 2024

நண்பரை கொலை செய்த இளைஞர் கைது

image

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் மணியரசன்(24). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது மணியரசனுக்கும், சபரிராஜனுக்கும் தகராறு ஏற்பட்டு சபரிராஜன், மணியரசுவை கீழே தள்ளியதில் மணியரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சபரிராஜனை நேற்று(மே 20) போலீசார் கைது செய்தனர்.

News May 21, 2024

முகத்தை சிதைத்து இளைஞர் கொடூர கொலை

image

உசிலம்பட்டி அருகே அயன் மேட்டுப்பட்டி டாஸ்மாக் கடை எதிரே உள்ள புத்தூர் மலையடிவார பகுதியில் நேற்று இரவு அடையாளம் தெரியாத இளைஞர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் சிந்துபட்டி போலிசார் உயிரிழந்தவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News May 21, 2024

ஆர்பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

image

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் சுகாதார வசதிகளின்றி நோய் பரப்பும் தளமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசு இந்த 3 ஆண்டு சாதனையாக மதுரையின் அடையாளமாக சொல்லப்படும் கலைஞர் நூலகம் சிறு மழைக்கே தாங்காத நிலையில் உள்ளதாக மழை நீர் புகுந்த புகைப்பட ஆதாரத்தை காட்டி விமர்சித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 21, 2024

ஊர்வன சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை!

image

மதுரையில் உள்ள நாகமலை தொடரை, மதுரை இயற்கை பண்பாட்டு மையம், பறவையியல் ஆா்வலா்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டதில் கட்டுவிரியன், எண்ணெய் பனையன், ஓலைப்பாம்பு, வெள்ளிக்கோல் வரையன், கொம்பேறி மூக்கன் உள்ளிட்ட ஊா்வன உயிரினங்கள் வசிப்பது தெரிய வந்துள்ளது. எனவே, நாகமலை வனப் பகுதியை ஊா்வன சரணாலயமாக அரசு அறிவிக்க வேண்டும் என இயற்கை பண்பாட்டு மையம் அரசுக்கும், வனத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

News May 21, 2024

முட்டைக்கோஸ் வியாபாரி கொலையில் 3 பேர் கைது

image

மதுரை சம்மட்டிபுரம் கோபால்(55), பரவை காய்கனி சந்தையில் முட்டைக்கோஸ் மொத்த வியாபாரம் செய்து வந்தாா். திடீரென, கடைக்கு வந்த 3 போ் கோபாலை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினா்.
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமி(45), காளிதாஸ்(32), வீரபாண்டி(38) ஆகிய மூவரை நேற்று(மே 20) கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக மூவரும் கோபாலை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News May 21, 2024

வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

image

வருங்கால வைப்பு நிதி நிறுவன மதுரை மண்டல ஆணையா் அமியகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் மாநில ஈட்டுறுதிக் கழக அலுவலகங்கத்தில் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம் மே 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வருங்கால வைப்பு நிதி தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

News May 20, 2024

நான் முதல்வன் திட்டத்தில் 6,714 பேர் பயன்

image

கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கும் நான் முதல்வன் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மதுரையில் இதுவரை 6,714 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாணவர்களுக்கு இத்திட்டம் கல்வியில் மட்டுமல்லாமல் வாழ்விலும் வெற்றி பெற செய்யும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!