Madurai

News April 24, 2024

மதுரையில் இன்று முதல் துவக்கம்

image

மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை <>https://rte.tnschools.gov.in/<<>> என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதில், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

News April 24, 2024

மதுரை மக்களே 4 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்

image

மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 104.36 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை பதிவானது. இதனால் பிற்பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் வழக்கத்தைவிட குறைந்த அளவே காணப்பட்டது. இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இதேபோல் வெப்பநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் வெயிலில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

News April 24, 2024

தந்தையை கத்தியால் குத்திய மகன்

image

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 22, 2024

ஒரே நாளில் ரூ.59 கோடிக்கு விற்பனை!!

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பின்னர் 3 நாட்களுக்கு பின் 20 அம் தேதி கடை திறக்கப்பட்ட நிலையில் மது பிரியர்கள் மது வாங்க குவிந்தனர். இதனால் ஒரே நாளில் மதுரை மண்டலத்தில் ரூ.59 கோடியே 74 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து தமிழக அளவில் மதுரை மண்டலம் 3 ஆம் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 22, 2024

மதுரை: சித்திரை திருவிழாவில் நெகிழ்ச்சி சம்பவம்

image

மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி வீதியுலாவின் போது ஆயிரக்கணக்கான சிறுமியர் மீனாட்சியம்மன் வேடமணிந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு மீனாட்சியம்மன் வேடமணிவித்து அவரை அம்மன் வீதி உலாவின்போது ஊர்வலமாக அழைத்து சென்றார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

News April 22, 2024

மீனாட்சியம்மனுக்கு இவ்வளவு அலங்காரமா ?

image

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில்  திருக்கல்யாண மேடையில் மணமகள் கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முத்து கொண்டை, மாணிக்க மூக்குத்தி, தங்கச்சடை, நலப்பதக்கம், பச்சைக்கல், மரகதப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார். பல்வேறு அலங்காரத்தில் மணக்கோலத்தில் வீற்றிருந்த மீனாட்சியம்மனுக்கு வைர மாங்கல்யம் அணிவித்தார் சுந்தரேஸ்வரர்.

News April 21, 2024

மேலூர்: கார்கள் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம்

image

சென்னையில் இருந்து அழகர் கோவிலுக்கு வந்து, கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்வினை தரிசித்து விட்டு, மீண்டும் சென்னையை நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் திரும்பி கொண்டிருந்தனர். மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது, கருங்காலக்குடி அருகே கம்பூரைச் சேர்ந்தவரின் கார் ஒன்று இந்த காரின் பின்புறமாக மோதியது. இதில் காரில் வந்த 5 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

News April 21, 2024

வாராரு வாராரு ! அழகர் வாராரு …!

image

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக கள்ளழகர் இன்று மாலை அழகர் மலையிலிருந்து புறப்பட்டார். கள்ளழகர் திருக்கோலம் ஏற்று தங்க பல்லக்கில் பவனி வரும் கள்ளழகருக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் உற்சாகம் பொங்க வழிபாடு நடத்தி வருகின்றனர். இன்று இரவில் அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டகப் பணிகளில் எழுந்தருள உள்ளார்.

News April 21, 2024

மதுரை: டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு

image

கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(32)க்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையத் தேவன் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு நவீன்குமார் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்டது. இது குறித்து கீழவளவு போலீசார் வெள்ளையத் தேவன், மகாலிங்கம், அசோக், அஜய், கார்த்தி, வசந்த், கண்ணன், பாலு ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, வெள்ளைய தேவன் மற்றும் அசோக்கை இன்று கைது செய்தனர்.

News April 21, 2024

கள்ளக்குடி: தேர்தல் புறக்கணிப்பு-வெளியான முக்கிய தகவல்

image

கள்ளிக்குடி அருகே தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் இங்கு நடத்திய ஆய்வு முடிவு குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கெமிக்கல் கழிவுகளோ , மருத்துவக் கழிவுகளோ கையாளப்படவில்லை.  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வருகிறது என தெரவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!