Madurai

News May 23, 2024

விருது வழங்கிய மதுரை ஆதீனம்…!

image

மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் இரண்டாம் நாளான  நேற்று (22.5.2024) மதுரை ஆதீனம் 293 ஆவது ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் வழக்கறிஞர் சைவத்திரு அ.சிவதாணுவிற்கு வள்ளலார் விருதும் வழக்கறிஞர் அசோகனுக்கு மருதுபாண்டியர் விருதும் வழங்கியருளினார் . இதையடுத்து சிறப்புச் சொற்பொழிவாக சைவத்திரு பவானி தியாகராசன் சைவத்துறை எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

News May 23, 2024

வெடி சத்தத்தால் அதிர்ந்த அரசு மருத்துவமனை

image

மதுரை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் விடுதியின் அருகில் மகப்பேறு வார்டு 6 தளங்களில் செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று விடுதியிலிருந்து வெடி சத்தம் கேட்டதால் கர்ப்பிணி பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், ஹவுஸ் சர்ஜன் முடித்துச் செல்லும் இரு மாணவர்கள் பட்டாசு வெடித்தது தெரியவர அவர்களிடம் நிர்வாக ரீதியில் விசாரிகின்றனர்

News May 23, 2024

மதுரை மாநகராட்சி அதிரடி முடிவு!

image

மதுரை மாநகராட்சியில் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் வரிவசூல் வேகத்தை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமையில் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் மாதம் தொடக்கம் முதல் வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரி பாக்கி உள்ளவர்கள் முறையாக செலுத்த ஆணையாளர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News May 23, 2024

மதுரை : பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தலைமையில் நேற்று (22.05.2024) நடைபெற்ற வாராந்திர பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 33 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பொது மக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் உடனடியாக விசாரணை மேற் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News May 22, 2024

மதுரை: சவுக்கு சங்கருக்கு ஜூன்.5 வரை சிறைக்காவல்

image

மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 20ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், 2 நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கருக்கு ஜூன்.5ஆம் தேதி வரை சிறைக்காவல் நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News May 22, 2024

மதுரையில் நாளை கனமழை

image

மதுரை மாவட்டத்திற்கு நாளை (மே.23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும்

News May 22, 2024

தான் துன்புறுத்தப்படவில்லை – சவுக்கு சங்கர்

image

போலீஸ் காவலில் நான் துன்புறுத்தப்படவில்லை என்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 2 நாள் காவல் விசாரணையில் இருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணை முடிந்து இன்று மீண்டும் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

News May 22, 2024

மதுரை: வைகையாற்றில் மூழ்கி பலியான சிறுவன்

image

மதுரை விரகனூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரது 10 வயது மகன் இன்று தனது நண்பர்களுடன் மதுரை வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் சிறுவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர்.

News May 22, 2024

மதுரை: வீர தீர செயலுக்கு விருது அறிவிப்பு

image

மத்திய அரசின் சார்பாக தேசிய அளவில் வீர, தீர செயல்புரிந்தவர்களுக்கு ‘டென்சிங் நார்கே ‘ விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நீர், நிலம் மற்றும் ஆகாயம் ஆகிய ஏதேனும் ஒன்றில் வியக்கத்தக்க சாதனை புரிந்து இருக்க வேண்டும். இந்த விருதுக்கு http://awards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அறிவித்துள்ளார்.

News May 22, 2024

மேலூர் : கிணற்றில் குழந்தை தள்ளி கொலை செய்த தாய் கைது

image

மேலூர் ஆட்டுக்குளம் ஊராட்சி உலகநாதபுரம் காலனியை சேர்ந்தவர் சமய முத்து மனைவி மலர்விழி(27). சமயமுத்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை இவரது மகள் கார்த்திகா(4) நேற்று பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை அருகில் உள்ள வயல் வெளி கிணற்றில் தள்ளி கொலை செய்தார் மலர்விழி. உறவினர்களின் தகவலை தொடர்ந்து மேலூர் போலீசார் அவரை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!