India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரபீலா பேகம்(35). இவர் சையது பானு என்பவரிடம் ரூ 20,000 கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் அசலை கொடுத்த பிறகும் மேலும் பணம் கேட்டு சையது பானு நேற்று தகராறு செய்து, ரபீலா பேகத்தின் சேலையை நடு ரோட்டில் இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரில் கொட்டாம்பட்டி போலீசார் சையது பானு, ஆயிஷா பீவி யாஸ்மின் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
மதுரை, மணியாச்சியைச் சேர்ந்தவர் நாகம்மாள்(70). இவர் நேற்று பெரியார் பேருந்து நிலையத்தில் நின்றபோது 60-வயது மதிக்கத்தக்க ஒருவர், முதியோர் உதவித் தொகை வாங்கித்தருவதாக கூறி நாகம்மாளை நம்ப வைத்து போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றார். செயின் அணிந்தால் கிடைக்காது என சொல்லி கழுத்தில் அணிந்திருந்த செயினை கழட்டி பர்ஸில் வைக்க சொல்லினார். புகைப்படம் எடுத்தபோது முதியவர் பர்ஸை திருடி சென்றார்.
திருமங்கலம் அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராம்குமாருக்கும் வீட்டின் கழிவுநீர் செல்வதில் தகராறு இருந்து வந்தது. இன்று இத் தகராறு முற்ற ராஜ்குமார், சரவணக் கண்ணன், சுப்புலட்சுமி, கவிதா, அழகுராணி ஆகியோர் சேர்ந்து கட்டையால் வீராச்சாமியின் மண்டையை உடைத்தனர். திருமங்கலம் போலீசார் 5 பேரையும் இன்று கைது செய்தனர்.
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராதிகா சரத்குமார் சுமார் 6 கோடியே 54 லட்சம், அவரது கணவர் சரத்குமார் 8 கோடியே 48 லட்சம் ரூபாயும், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்கள். அதனால் தான் அவர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் சு. வெங்கடேசனுக்கு வாக்குகள் கேட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “பாஜக ஒரு பாசிச கட்சி. பொருளாதார அறிவு சற்றும் இல்லாத கட்சி. இன்னும் 5 ஆண்டுகளுக்கு அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால், பாகிஸ்தானை விட மோசமான பொருளாதார நிலைமைக்கு இந்தியா சென்று விடும்” என கூறினார்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசு, பணம் உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி கடந்த 2011ல் வாக்குக்கு பணம் கொடுத்தாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(60). இவர் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் நேற்று இரவு சாலை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாமிநாதன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாமிநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை புறநகர் ஆனையூர் பகுதியில் நேற்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர்களை தி.மு.க. வஞ்சித்து ஏமாற்றி வருகிறது” என விமர்சித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு வினியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருக்கல்யாணத்தை காண 200, 500 ரூபாய் என இரண்டு சிறப்பு கட்டண சீட்டு அனுமதிக்கப்பட உள்ளது. சிறப்பு கட்டண சீட்டுகள் பெற மதுரை மேலச்சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுத்த ஒப்பந்தங்களை ரத்து செய்து, குறிப்பிட்ட சமூக மக்களுக்கு, தூய்மை பணி மற்றும் கழிப்பிட ஒப்பந்தங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் கொடுங்கள் என்று எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்திற்கு எதிரானது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்
Sorry, no posts matched your criteria.