Madurai

News March 28, 2025

மார்ச்.31 வரை காமராஜர் பல்கலையில் மாணவர் சேர்க்கை

image

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்கம் பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலில் 21 இளங்கலை பட்டப் படிப்புகள்,20 முதுகலை பட்டப் படிப்புகள் மார்ச் 31 வரை நடக்கின்றன. இதன் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பல்கலைக்கழக கல்வியின் இணையதள வழியாக நடைபெறுகிறது.சேர விரும்பும் மாணவர்கள் https://mkuniversityadmission.samarth.edu.in/ என்ற பல்கலைக்கழக இணைய நல முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News March 28, 2025

எம்பி சு.வெங்கடேசன் தந்தை காலமானார்

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் திரு. இரா.சுப்புராம் அவர்கள் (வயது 79) இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருடைய இறுதி நிகழ்வுகள் இன்று மாலை, மதுரை ஹார்விபட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறும். மேலும் சு.வெங்கடேசன் தந்தைக்கும் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தர உள்ளனர்.

News March 28, 2025

மதுரையில்  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வாய்ப்பு 

image

மதுரை மாநகராட்சியில் CITIIS 2.0 பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் விபரங்களை www.maduraicorporation.co.in மாநகராட்சி என்ற இணையதள முகவரியில் இப்பணிக்கு விண்ணப்பம் விரும்புவோர்கள் எதிர்வரும் 03.04.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

News March 28, 2025

மதுரையில் 3 மாதங்களில் மூன்று போலீசார் கொலை

image

மதுரையில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 3 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிப்.2ல் குடும்ப பிரச்சினையில் நாகையாபுரம் காவல் நிலைய காவலர் சிவா வெட்டி கொலை செய்யப்பட்டார். மார்ச் 18ல் காளையார் கோவில் தனிப்படை காவலர் மலையரசன் ஆட்டோ ஓட்டுநரால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

News March 28, 2025

மதுரை மாநகராட்சியில் மகப்பேறு மரணம் மற்றும் சிசு மரண விவரம் வெளியீடு

image

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற சுகாதார நிலையங்களில் மகப்பேறு மரண விகிதம் 2023-2024-ஆண்டுகளில் 39.70% இருந்தது. மாநகராட்சியின் உரிய நடவடிக்கையினால் 2024-2025-ஆம் ஆண்டில் 21.60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிசு மரண விகிதம் 2023-2024-ஆம் ஆண்டுகளில் 7.8% இருந்தது. மாநகராட்சியின் உரிய நடவடிக்கையினால் 2024-2025-ஆம் ஆண்டில் 6.18% ஆக குறைக்கப்பட்டுள்ளது என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தகவல்.

News March 27, 2025

உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் பதவி நீக்கம்

image

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலர், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக உள்ள க.சகுந்தலா உட்பட 4 பேரை பதவி நீக்கம் செய்துள்ளார். சட்ட வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படுவோரை நீக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதால் பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகர்மன்றதலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 27, 2025

மதுரை : கடன் தொல்லை நீக்கும் எழுமலை சிவன்

image

மதுரை மாவட்டம் எழுமலை அருகே அமைந்துள்ளது ஆதிமூர்த்தி சிவன் கோவில். இந்த கோவிலில் மட்டும் தான் சிவன் நாக வடிவில் உள்ளார். கோவில் பங்குனி திருவிழா சமயங்களில் சிவனுக்கு உருவம் அமைத்து இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். பங்குனி சிறப்பு நாட்களில் இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் பணவிரயம் நீங்கி, செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். பணக்கஷ்டத்தில் வாடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 27, 2025

மதுரை மக்களுக்கு குட் நியூஸ் – வெளியான சூப்பர் அறிவிப்பு

image

மதுரை மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது . இதில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன்படி மதுரையில் 24 பள்ளிகளில் 75லட்சம் மதிப்பில் அதிநவீன படிப்பகங்கள் அமைக்கபட உள்ளது. மாட்டுத்தாவணியில் 3கோடி மதிப்பில் உணவுத் தெரு அமைய உள்ளது. 10 கோடி மதிப்பில் 2 அறிவியல் பூங்கா ,8 இடங்களில் “நம்ம மதுரை” செல்ஃபீ பாய்ண்ட் அமைய உள்ளது.

News March 27, 2025

மதுரை:  குறைந்த செலவில்  நீச்சல் பயிற்சி

image

மதுரை மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகளுக்கு ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை குறைந்த செலவில் நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மாதாந்திர பயிற்சிக்கு ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்படும். www.sdat.in.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்வது அவசியம். வல்லுநர்கள் மூலம் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது.

News March 27, 2025

10ம் வகுப்பு பொதுத் தேர்வு 38,483 மாணவர்கள் எழுதுகின்றனர்

image

மதுரை மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. முதல் நாள் மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கிலம் ஏப்ரல் 4-ம் தேதி மொழிப்பாடம் ஏப்ரல் 7-ஆம் தேதி கணிதம் ஏப்ரல் 11-ல் அறிவியல் ஏப்ரல் 15 இல் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 486 பள்ளிகள் சேர்ந்த 38,483 பேர் பத்தாம் வகுப்பு எழுதவுள்ளனர்.

error: Content is protected !!