India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் நாகனாகுளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட மணிவேல் என்ற தூய்மை பணியாளர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். மதுரையில் சுட்டெரிக்கும் அதிக வெயிலின் காரணமாக தூய்மை பணியின் போது மயக்கம் ஏற்பட்டு தலை சுற்றி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். *வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
▶️மதுரை கலெக்டர்- 0452-2531110.
▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0452-2533272.
▶️மாநகராட்சி ஆணையர்- 0452 2531116.
▶️காவல் ஆணையர்- 0452-2533005.
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0452-2539477.
மதுரை மக்களே இது போன்ற முக்கிய எண்களை தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
மதுரை, ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் ஆன்டனி டேவிட்ராஜ், 28. பிரபல உணவு டெலிவரி நிறுவன ஊழியரான இவர், ஆண்டாள்புரத்தில் ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார். அங்கு, 10 வயது சிறுமியிடம் உணவு பார்சல் கொடுத்த போது சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பினார். வீட்டில் உள்ளவர்களிடம் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து மறுநாள் அதே பகுதியில் உணவு டெலிவரி செய்ய வந்த ஆன்டனி டேவிட்ராஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்ற இளைஞர் பூனை கடியால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் தான் சிகிச்சை பெற்று வந்த ரேபிஸ் வார்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.
மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.
பேரையூர் அருகே பெரியபூலாம்பட்டி பேச்சியம்மாள் 62. சில ஆண்டுகளுக்கு முன் இவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து, கழுத்தை நெரித்து அதே பகுதியை சேர்ந்த லட்சுமி 53, என்பவர் கொலை செய்தார். பேரையூர் போலீசார் கைது செய்தனர். மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. லட்சுமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி(கூடுதல் பொறுப்பு) நாகலட்சுமி உத்தரவிட்டார்.
மதுரையைச் சுற்றியுள்ள பிரபலமான கோவில்கள்
▶️மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
▶️வண்டியூர் மாரியம்மன் கோயில்
▶️கூடல் அழகர் கோயில்
▶️ராக்காயி அம்மன் கோயில்
▶️கள்ளழகர் கோயில்
▶️இம்மையிலும் நன்மை தருவார் கோயில்
▶️திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
▶️சோலைமலை முருகன் கோயில்
இந்த கோவில்களுக்கு செல்ல நினைக்கும் உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. உடனே இருவரும் ரகளையில் ஈடுபட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்தி நீதிபதியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.