India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை, திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை கமிஷன் அடிப்படையில் இயக்க ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை sr.indianrailways.gov.in அறியலாம்
மதுரை, திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது.
கல்லூரி வளாகத்தில் முதல் பொது கலந்தாய்வு வருகிற ஜூன் 10 முதல் 15 தேதி வரையும், இரண்டாம் பொது கலந்தாய்வு ஜூன் 24 தொடங்கி 29 வரையும் நடைபெறுகிறது. கலந்தாய்வு முடிந்த பிறகு, முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது.
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு, ” விமான நிலைய விரிவாக்க பகுதிக்கு தேவைப்படும், 86.20 ஏக்கர் பரப்பளவில் ஈச்சனோடை அருகே உள்ள இரு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உட்பட 89.53 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இதுவரை ஒப்படைக்க வில்லை ” என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
மதுரை சத்ய சாய் நகரை சேர்ந்த என்.ஜி.மோகன் கடந்த 2019ல் தேனி மாவட்டம் போடி தாலுகா அலுவலகத்திற்கு மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 1550 நாட்களாக பதில் அளிக்காததால் சென்னை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையம் வட்டாட்சியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டியுள்ளது.
மதுரை ஆண்டாள்புரம் வெங்கடேஸ்வரன்(50). அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி ஆசிரியராக உள்ளார். நேற்று கல்லூரிக்கு சென்ற இவரை வழிமறித்த 4 பேர் கடுமையாக தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணையில் வெங்கடேஸ்வரன் சகோதரரான திருச்சி மின்அமலாக்கத்துறை அதிகாரி கொண்டல்ராஜ் மகனுடைய விவாகரத்து வழக்கில் சகோதரர் தரப்பிற்கு ஆதவராக இருந்ததால் எதிர் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக மக்கள் அதிகாரிகளிடம் வழங்கும் மனுவின் மீது உரிய முடிவை எடுக்காமல், காரணமின்றி நிலுவையில் வைப்பது அதிகாரிகளின் கடமை மீறிய செயல் என மதுரை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மதுரை ஏஏ சாலையில் உள்ள புதிய டாஸ்மாக் கடையால் மக்கள் பாதிக்கப்படுவதால் அதை மூட கோரி தாக்கல் செய்த மனுவில் நேற்று மாவட்ட ஆட்சியர், கலால் ஆணையர் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
மதுரையில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியின் கீழ் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பெட்கிராட் நிறுவனத்தில் மகளிருக்கான 3 மாத கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற 45 வயது வரையுள்ள ஏழைப்பெண்கள் பங்கேற்கலாம். சிறுபான்மை, எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 89030 03090ல் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மதுரை வருகிறார். இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மீனாட்சி கோயில் பகுதிகள் மற்றும் அவர் தங்குமிடம், பயணிக்கும் சாலைப்பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்த குமார் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் குழு கல்லுாரி கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையில் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்னர் இக்குழு செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது
மதுரை அரசு மியூசிய வளாகத்தில் கூடல் கலைக்கூடம் சார்பில் வரும் ஜூன் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதியம் 3 முதல் மாலை 6 மணி வரை இலவச பறை இசை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் 30 பேர் பங்கேற்கலாம் என்பதால் முன்பதிவு கட்டாயம் எனவும், ஆர்வம் உள்ளவர்கள் 94434 54446 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.