Madurai

News April 24, 2024

தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்

image

ராஜஸ்தானில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். ‘இந்துக்களின்
சொத்துகளை காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு கொடுத்து விடும்’ எனக் கூறினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் வகையில் “Rest in Peace” இந்திய தேர்தல் ஆணையம்” என்று அமைச்சர் பிடிஆர் தன் X பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

News April 24, 2024

ரசாயனம் கலந்த தண்ணீரை கள்ளழகர் மீது பீய்ச்சியடிக்க தடை

image

மதுரை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது கள்ளழகர் மீது ரசாயன பொடி, பால், தயிர் கலந்த தண்ணீரை பீச்சியடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இன்று நடந்த சித்திரை திருவிழா ஏற்பாடு குறித்த பொதுநல வழக்கு விசாரணையில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள விழா ஏற்பாடு திருப்தி அளிப்பதாக பாராட்டியுள்ள நீதிமன்றம் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்கும் இடத்தில் 2,500 பேரை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

நாளை கள்ளழகர் திருவிழா – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

“மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிக்கிறது. விஐபிக்களுக்கு வழங்கப்பட்ட 2400 பாஸில், ஒரு பாஸ்க்கு ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும், மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் ” என மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

மதுரையில் இன்று முதல் துவக்கம்

image

மதுரை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை <>https://rte.tnschools.gov.in/<<>> என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதில், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

News April 24, 2024

மதுரை மக்களே 4 நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்

image

மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 104.36 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை பதிவானது. இதனால் பிற்பகல் நேரங்களில் மக்களின் நடமாட்டம் வழக்கத்தைவிட குறைந்த அளவே காணப்பட்டது. இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இதேபோல் வெப்பநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் வெயிலில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

News April 24, 2024

தந்தையை கத்தியால் குத்திய மகன்

image

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(46) இவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பால்பாண்டி அவரது மனைவியை தாக்கியதால் ஆத்திரமடைந்த அவரது 16 வயது மகன் பால்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பால்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

News April 22, 2024

ஒரே நாளில் ரூ.59 கோடிக்கு விற்பனை!!

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பின்னர் 3 நாட்களுக்கு பின் 20 அம் தேதி கடை திறக்கப்பட்ட நிலையில் மது பிரியர்கள் மது வாங்க குவிந்தனர். இதனால் ஒரே நாளில் மதுரை மண்டலத்தில் ரூ.59 கோடியே 74 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து தமிழக அளவில் மதுரை மண்டலம் 3 ஆம் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 22, 2024

மதுரை: சித்திரை திருவிழாவில் நெகிழ்ச்சி சம்பவம்

image

மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி வீதியுலாவின் போது ஆயிரக்கணக்கான சிறுமியர் மீனாட்சியம்மன் வேடமணிந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு மீனாட்சியம்மன் வேடமணிவித்து அவரை அம்மன் வீதி உலாவின்போது ஊர்வலமாக அழைத்து சென்றார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

News April 22, 2024

மீனாட்சியம்மனுக்கு இவ்வளவு அலங்காரமா ?

image

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில்  திருக்கல்யாண மேடையில் மணமகள் கோலத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முத்து கொண்டை, மாணிக்க மூக்குத்தி, தங்கச்சடை, நலப்பதக்கம், பச்சைக்கல், மரகதப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து எழுந்தருளினார். பல்வேறு அலங்காரத்தில் மணக்கோலத்தில் வீற்றிருந்த மீனாட்சியம்மனுக்கு வைர மாங்கல்யம் அணிவித்தார் சுந்தரேஸ்வரர்.

News April 21, 2024

மேலூர்: கார்கள் மோதிக் கொண்டதில் 5 பேர் காயம்

image

சென்னையில் இருந்து அழகர் கோவிலுக்கு வந்து, கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்வினை தரிசித்து விட்டு, மீண்டும் சென்னையை நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் திரும்பி கொண்டிருந்தனர். மேலூர் நான்கு வழிச்சாலையில் சென்ற போது, கருங்காலக்குடி அருகே கம்பூரைச் சேர்ந்தவரின் கார் ஒன்று இந்த காரின் பின்புறமாக மோதியது. இதில் காரில் வந்த 5 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

error: Content is protected !!