India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை தத்தனேரி பிரதான சாலையைச் சோ்ந்தவா் கனகவேல் (80). இவர் நேற்று தத்தனேரி பிரதான சாலையில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டம் வழியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்தியவரை போலீசார் தேடுகின்றனர்.
நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளது’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற காவல்துறை அதிகாரியின் மனைவி தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையில், ஊழல் வீட்டிலிருந்தே துவங்குவதாக கருத்து தெரிவித்து மனுதாரர் தவறான முறையில் பெற்ற பணத்தில் வாழ்ந்துள்ளார். இதனால் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள்
அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து தங்களது வாழ்நாள் சான்று பெற்று 15.06.2024க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு 0452-2529695ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலூர் அருகே கருங்காலக்குடி பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கருங்காலக்குடி சார்பதிவாளர் அருள்முருகனிடம் இருந்து ரூ.1.85,700 லஞ்சம் பெற்றதாக கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அருள் முருகன் கைது செய்யப்பட்டார். மேலும் தற்காலிக பணியாளர்கள் சிலரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக காரை ஓட்டிய புகாரில் டிடிஎஃப் வாசன் நேற்று கைது செய்யப்பட்டார். டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை அப்போலோ மருத்துவமனை குழுவினர் 51 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். கல்லீரல் மாற்று சிகிச்சை செயல் திட்டத் தலைவர் டாக்டர் இளங்குமரன் கூறியது, ” 2015 முதல் தற்போது வரை சிறியவர்கள், பெரியவர்கள் உட்பட 51 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து, அப்போலோ மருத்துவமனை தனது நிபுணத்துவத்தை நிலைநாட்டியுள்ளது” என்று கூறினார்.
தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் அந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இரு முறை ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் சவுக்கு சங்கர் தனது ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 1 போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பயன்பெற மாவட்ட ஆட்சியர் சங்கீதா இன்று அறிவித்துள்ளார்.
மதுரை பேரையூர் காளப்பன்பட்டி பகுதியில் கடந்த 2022ல் 85 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் பேரையூர் காளப்பன்பட்டியை சேர்ந்த ஆனந்தன், ஆனந்தகுமார் ,ஆந்திராவை சேர்ந்த தேவராஜ்,பாலவெங்கட சிரிபாபு,
ராஜசேகர், ஹரிஸ் ஆகிய 6 பேர் கைதாகினர். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 6 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை பழங்காநத்தம், ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், செல்லுார் பகுதிகளில் நேற்று சில டெப்போக்களில் நுகர்வோர்கள் அதிகம் வாங்கும் அரை லிட்டர் கோல்டு, டீக்கடை நடத்துவோர் வாங்கும் ‘டீ மேட்’ பாக்கெட்டுகளிலும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கெட்டுப் போன பாக்கெட்டுகளை ஆவின் திரும்ப பெற்று, மாற்று பாக்கெட்டுகள் வழங்கியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.