Madurai

News May 1, 2024

உழைப்பாளர் தினத்தில், மதுரையில் 1 ரூபாய்க்கு ‘டீ’

image

உழைப்பாளர் தினத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று (மே 1) மட்டும் அனைவருக்கும், வெறும் 1 ரூபாய்க்கு மசாலா டீ வழங்குகிறது மதுரையில் உள்ள நைனாஸ் டீக்கடை.
கடையின் நிறுவனர் கூறுகையில், “ கடந்த மூன்று ஆண்டுகளாக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு, 1 ரூபாய்க்கு தேநீரை வழங்கி வருகிறோம்” என்றார்.

News May 1, 2024

மதுரையில் ஒரு முட்டை, 3 ரூபாய், மக்கள் ஆர்வம்

image

முட்டை மற்றும் கோழி உற்பத்தி செய்யும் மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் காரணமாகவும், கேரளாவில் பரவி வரும் பறவை நோய் காரணமாகவும், முட்டையின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில், ஒரு முட்டை, மூன்று ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மக்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர்.

News May 1, 2024

மதுரை அரசு மருத்துவமனை செய்த சாதனை

image

மதுரையை சேர்ந்த 55 வயது பெண் சுமார் 15 வருடங்களாக கழுத்தில் தைராய்டு கட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 10ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவருக்கு பொது அறுவை சிகிச்சைத்துறை குழு மூலம் ஆபரேஷன் செய்து வெற்றிகரமாக அந்தக் கட்டியை நேற்று அகற்றினர். சுமார் 3.5 லட்சம் செலவிலான இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது

News May 1, 2024

ரூ.3.69 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்!

image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ரூ.3.69 லட்சத்துக்கு தேங்காய், மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. மட்டையுடன் கூடிய தேங்காய்கள் ரூ. 2,11,867-க்கு விற்பனையாகியுள்ளது. கொப்பரை தேங்காய்கள் ரூ. 1,57,149-க்கு விற்பனையாயுள்ளது . இதில் 16 விவசாயிகள், 8 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.

News April 30, 2024

உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு

image

மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் இன்று சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா முகாமிற்கு தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் வி. கங்காபுர்வாலா, மகாதேவன் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் குடும்ப பிரச்சினைகள், நில அபகரிப்பு, சீட்டு மோசடி குறித்து நிவாரணம் வேண்டி நீதிபதிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

News April 30, 2024

பலகோடி மோசடி, நிதி நிறுவன தலைவர் கைது

image

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி லிமிடெட் நிறுவனம் மீது பண மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, தலைமறைவாக இருந்த அதன் தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற விஜய்கிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை ரூ.8 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப் பட்ட 222 நபர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

News April 30, 2024

ரயில்வே ஊழியருக்கு கத்திக்குத்து- சிறுவன் கைது

image

மதுரை ரயில்நிலையத்தில் நேற்று நண்பகலில் திண்டுக்கல் – நெல்லை ரயில் பெட்டியில் கார்டராக இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ராக்கி(28) என்ற பெண் அதிகாரியிடம் ரயில் பெட்டியில் ஏறி கத்தியால் தலையில் தாக்கி செல்போன் மற்றும் 500 ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் செல்லூர் பகுதியை சேர்ந்த சிறுவனை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிய மற்றொருவரை போலீசார் தேடுகின்றனர்.

News April 30, 2024

மதுரை மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

நேற்று (ஏப்.29) மதுரை நகரம் 104°, விமானநிலையம் 104.36° பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால், மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

பள்ளி மாணவர்களுக்கு கோடை கால இலவச பயிற்சி

image

தமிழக பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்காண கோடை கால இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 2 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் குறும்பட பயிற்சி, கதை எழுதுதல் பயிற்சி, நாடக பயிற்சி, ஓவிய பயிற்சி, ஒயிலாட்டம், சதுரங்க போட்டி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க உள்ளது. பயிற்சி நிறைவு செய்யும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

News April 30, 2024

நாளை டாஸ்மாக் மூடல் – உத்தரவு!

image

மதுரை மாவட்டத்தில் நாளை (01.05.2024) “மே தினத்தை” முன்னிட்டு, உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை உள்ளிட்ட அனைத்து வகை மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூடப்பட்டு இருக்கும் எனஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் மது விற்பனை தொடர்பான விதிமீறல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!