Madurai

News April 25, 2024

கோடை காலத்தில் விவசாயிகள் வருமானம் ஈட்ட திட்டம்

image

‘குறுகியகால பயிர்களை ஊக்குவிக்க ஏப்ரல், மே, ஜூனில் நிலக்கடலை 30 எக்டேரிலும் , உளுந்து 15 எக்டேரிலும் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவசாயிகள் தேர்வு திருப்பரங்குன்றம் பகுதியில் நடக்கிறது. தேர்வாகும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். இதன் மூலம் கோடையிலும் விவசாயிகள் வருமானம் ஈட்டலாம் என வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

மதுரை அரசு மருத்துவமனையில் புதிய கண்டுபிடிப்பு!

image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் கதிரியக்கத் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில் குமார். இவர் கண்டுபிடித்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கதிரியக்க சிகிச்சையை துல்லியமாக அளிக்க உதவும் ‘புளோரசன்ஸ் மாா்க்கருக்கு ‘ மத்திய அரசு காப்புரிமை வழங்கியது. இதற்காக நேற்று செந்தில்குமாரை, அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் பாராட்டினார்.

News April 25, 2024

மதுரை மக்களே எச்சரிக்கையாக இருங்க…!

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் nமதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை நகர் பகுதியில் 101.12°F, மதுரை விமான நிலையத்தில் 103.28°F, வெப்பம் பதிவானது. மேலும் சில நாட்கள் இதேபோன்ற வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News April 25, 2024

தமிழக டிஜிபிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

image

தமிழகத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தமிழக டிஜிபியால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் அனுமதி மறுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையில் ரத்து செய்ய கோரிய வழக்கின் விசாரணையில் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

News April 25, 2024

நியோமேக்ஸ் மோசடி: மேலும் 4 பேர் கைது

image

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே 30 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் கிளை நிறுவன இயக்குனர்களான சார்லஸ், இளையராஜா, சஞ்சீவ் குமார் உள்ளிட்ட 4 பேரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

சித்திரை திருவிழாவில் நகை பறித்த 5 பெண்கள் கைது

image

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் விழாவில் பங்கேற்ற 4 பெண் பக்தர்களிடம் இருந்து 9 சவரன் நகைகளை திருடிய திருச்சியை சேர்ந்த சுதா, மீனா, ரஞ்சிதா மற்றும் நாகையை சேர்ந்த லட்சுமி, தேவி உள்ளிட்ட 5 பெண்களை மதுரை மதிச்சியம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 25, 2024

நடு ரோட்டில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் போராட்டம்

image

மதுரை, கள்ளிக்குடி அருகே கே.சென்னம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உர ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று 10-க்கும் மேற்பட்ட கிராம
மக்களோடு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று ஆலையை மூட வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News April 25, 2024

டன் கணக்கில் குவிந்த குப்பைகள்!

image

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் இருக்கும் வைபவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் மதுரை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 25, 2024

மதுரையில் வணிகர்களுக்கு அதிரடி உத்தரவு

image

மக்களவைத் தோ்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தொழிலாளா் நலத் துறையின் உதவி ஆணையா் மு.காா்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் விடுப்பு வழங்காத நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக 94453 98761, 99425 41411மற்றும், 0452 2604388 என்ற தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

News April 25, 2024

தவறான செய்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை

image

கள்ளழகர் திருவிழாவில் நேற்று இருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் சோணை என்பவர் பலியானார். கார்த்திக் என்பவர் மனைவிக்கும் சதீஷ் என்பவருக்கும் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உளவு, காரணமாக இந்த கத்தி குத்து சம்பவம் நடைபெற்றது. ஆனால் சமூக வலைத் தளங்களில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு என செய்தி பரவுகிறது. தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!