Madurai

News April 26, 2024

ஆன்லைன் கேமிங் செயலி மோசடி: பரபரப்பு புகார்

image

விளையாட்டு தொடர்பான ஆஃப்களில் பிரபலமான DREAM -11 ஆஃப் பயனாளிகளை ஏமாற்றி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. DREAM 11 ஆப்பில் ஒரே பெயர்களுடைய ஏராளமான நபர்கள், போட்டிகளில் கலந்துகொள்வது போல சாப்ட்வேர் மூலமாக முறைகேடாக விளையாடி, பொது மக்களின் பணத்தை ஏமாற்றி வருவதாக, விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 25, 2024

மாவட்ட எஸ்பி வழங்கிய முக்கிய அறிவுரை

image

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (25.04.2024) மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

News April 25, 2024

மதுரை: 13 பேர் சேர்ந்து தாக்கிய கொடூர சம்பவம்

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (17). இவரது உறவினர் உதயாவிற்கும் கோசாகுளத்தை சேர்ந்த ராஜேஷ்க்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜேஷ் 13 பேர் கொண்ட கும்பலாக நேற்று இரவு நாகரத்தினத்திடம் உதயாவை எங்கே எனக் கேட்டு, 13 பேரும் சேர்ந்து தாக்கினர். இதுகுறித்து 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 25, 2024

மதுரை: குழந்தையை கடத்திய பெண்கள் கைது

image

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் தனது 6 மாத குழந்தையுடன் மதுரை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். தாயின் புகாரை அடுத்து, குழந்தையை கடத்திய 2 பெண்களை 24 மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தனர்.

News April 25, 2024

அலங்காநல்லூர் : சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை

image

அலங்காநல்லூரை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வாரம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அதை ஊரைச் சேர்ந்த பிரவீன்குமார் (25), என்பவர் பள்ளி சிறுமியை கடத்தி அவரது நண்பர் அறையில் 2 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாய் நேற்று இரவு புகார் அளித்துள்ளார். பிரவீன்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 25, 2024

கீழவளவு : டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது

image

கீழவளவை சேர்ந்த நவீன்குமார்(26). கடந்த வாரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனது காரினுள் இருந்த போது, ஒரு கும்பல் அவர் கார் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது. இதில் அவர் காயம் அடைந்தார். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், இன்று கீழவளவு அசோக்(29), அடைஞ்சன் கண்மாய்பட்டி கார்த்திக்(27), மேலூர் பாக்யராஜ் (37), சிவகங்கை மாவட்டம் கட்டானிபட்டி ராஜபிரபு(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News April 25, 2024

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்

image

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில் பக்தர்கள் கூடும் இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி 98 இடங்களில் அமைக்கப்பட்டது. திருவிழா முடிந்த போதிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து 98 இடங்களிலும் குடிநீர் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

image

திருமங்கலம் அருகே சின்ன மறவன்குளத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் மதனா பாண்டியராஜன் திருமணமாகி விவகாரத்து ஆன நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி பெற்றோருக்கும் இவருக்கும் தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மதன பாண்டியராஜன் தூத்துக்குடி – பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 25, 2024

மதுரையின் முதல் அடையாளம் மீனாட்சி அம்மன் கோவில்

image

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு சிவனை விட மீனாட்சிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 274ஆவது தேவாரப்பாடல் பெற்ற இத்தலம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். 15 ஏக்கர் பரப்பளவில் 8 கோபுரங்களும் 2 விமானங்களும், கலைநயத்துடன் கூடிய பல மண்டபங்கள், இசைத்தூண்களையும் கொண்டு காட்சியளிக்கிறது. ஒவ்வொரு கோபுரமும் வெவ்வேறு காலகட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.

News April 25, 2024

அரசு பேருந்து மீது பீர் பாட்டில் வீச்சு!

image

செக்கானூரணியிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
ஆலம்பட்டி பாரதியார் நகரில் பேருந்து சென்றபோது சாலை ஓரத்தில் உள்ள தனியார் கிளப்புடன் கூடிய பார் அருகே நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் காலி பீர் பாட்டிலை பஸ்சின் பக்கவாட்டு ஜன்னல் மீது வீசினார். இதில் பயணி அமுதவல்லி என்ற பெண் காயமடைந்தார். அடாவடி செய்த மர்மநபரை போலீசார் தேடுகின்றனர்.

error: Content is protected !!