India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் முடிவுகளுக்கு பின்பு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் மதிமுக இடம் பெறாது என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இன்று அலங்காநல்லூரில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு சர்வாதிகாரத்தின் உச்சம் என்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு சிறப்பு தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சி பக்தர்கள் சார்பில் நடைபெற்றது. இதையொட்டி மீனாட்சி அம்மன் தங்க ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் தங்கத்தேரில் உலா வந்த மீனாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் இளைஞர்கள் அடிக்கடி பைக் சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்குவது, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் நிகழ்வு தொடர்கிறது. ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் செய்யும் இச்செயலை தடுக்கும் வகையில் மாநகர காவல் துறை பறக்கும் பாலத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக் கல்வியை கணினி மூலம் வழங்கும் திட்டம் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக
பொது நுாலக இயக்குநர் இளம்பகவத் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்
இளைஞர்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் புத்தகங்களை படிக்கும் இடமாக மட்டுமின்றி திறன்களை வளர்க்கும் இடமாகவும் மாறி வருகிறது என்றார்.
மலேசியா சிலம்ப கழகம், இன்டர்நேஷனல் சிலம்பம் பெடரேஷன் சார்பில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
மதுரை மங்கையர்க்கரசி பள்ளியின் 5ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன், 7 முதல் 9 வயது ஆடவர் பிரிவு தனித்திறமை போட்டியில் கார்த்திகேயன் வெண்கல பதக்கம், ஒற்றை அலங்கார சுற்றுப் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.
மாணவரை தாசில்தார் மீனாட்சி, கவுன்சிலர் பாமா, ஸ்ரீமாருதி சிலம்பப் பள்ளி பயிற்சியாளர் பாராட்டினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன்.12ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உற்சவம் நடைபெறும் நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேத்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் அருளிய திருப்பொன்னூஞ்சல் ஓதப்படும்.
வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்.4ஆம் தேதி மதுபானகடைகள் செயல்பட கூடாது என மதுரை ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மதுக்கூடங்கள், மதுபான பார்கள் ஆகியவை காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படகூடாது எனவும், மதுபானங்கள் விற்பனை செய்தாலோ,வேறு இடங்களுக்கு கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரடிக்கல் ஊராட்சி பெருமாள் பட்டியைச் சேர்ந்த பெருமாள்- உமா தம்பதியினர் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மகளுடன் தாய் உமா செல்போனில் பேசியதை கண்டித்து பெருமாள் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றியவர்களுக்கு , 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன.
https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் அறிவித்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 4-க்கான எழுத்துத் தோ்வு வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 1,07,724 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 393 மையங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி, பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.