Madurai

News May 3, 2024

மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம் வருவதா ?

image

மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வீரமுத்துப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி பெற்றுத் தரக்கோரி மக்கள் பிரதிநிதிகளிடம் ஏன் முறையிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

News May 3, 2024

மதுரை: ராஜினமா அதிர்ச்சியளிக்கிறது

image

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார், தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்.

News May 3, 2024

காங்கிரஸ் முக்கிய நிர்வாகி காலமானார்!

image

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணித் தலைவர் வேல்பாண்டி இன்று (மே.3) காலை காலமானார். மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News May 3, 2024

மதுரையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை

image

மதுரையில் நேற்று ( வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. மதுரை மாவட்டத்தின் வெப்ப நிலை, அதிகபட்சமாக 107.6 டிகிரி பாரன்ஹீட் டாக ( 42 டிகிரி செல்சியஸ்) பதிவானது. கடந்த 2019ம் ஆண்டு மே 29ந் தேதி மதுரையில் 42 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News May 3, 2024

குண்டர் தடுப்பு சட்டம்-நீதிமன்றம் அதிரடி

image

பேஸ்புக் நட்பில் இருந்தவர் வன்கொடுமை செய்த புகாரில், குண்டர் சட்ட நடவடிக்கை தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரிய மனு மீதான நேற்றைய விசாரணையில், குண்டர் சட்ட கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இந்த வழிமுறைகளை உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கையாக வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

News May 3, 2024

நீட் நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி நிறைவு

image

நீட் நுழைவுத் தோ்வுக்கான இலவச பயிற்சிக்கு, விண்ணப்பித்த 490 மாணவ, மாணவிகளுக்கு ஒத்தக்கடை மாதிரிப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். ஆகிய பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. மாா்ச் 27ல் தொடங்கி தமிழ், ஆங்கில வழியில் பயிற்சிகள், தோ்வுகள் நடைபெற்றன. மேலும், திருப்புதல் மற்றும் வாராந்திரத் தோ்வுகளும் நடைபெற்றன.நேற்று (மே 2) பயிற்சி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

News May 2, 2024

மதுரை கலெக்டர் முக்கிய அறிவுரை

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் ஆட்சித்தலைவர் சங்கீதா தலைமையில், வெயிலின் தாக்கத்தினை சமாளிக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் (ம) வெப்பத்தினை பொதுமக்கள் எதிர்கொள்ள வழிகாட்டுதல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மதுரை மாவட்டத்தில் மதிய வேளையில் குறிப்பாக 11 மணி முதல் 3.30 மணி வரை
வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.

News May 2, 2024

வழக்கறிஞர் சங்க தலைவர் தேர்வு

image

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கத்திற்கு 2024-2025ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பொதுச்செயலாளராக சரவணக்குமார், துணைத் தலைவராக டி. சி. பி. சக்கரவர்த்தி, பொருளாளராக பி. சரவணக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், முன்னாள் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News May 2, 2024

மதுரை மழைக்கு வாய்ப்பு!

image

மதுரை மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 2, 2024

கணவன் மனைவியை கத்தியால் குத்திய முகமூடி மனிதர்கள்

image

உசிலம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சங்கர்(44). நேற்றிரவு இவரது மனைவி ராஜம்மாளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் கதவைத் தட்டி வீட்டிற்குள் நுழைந்து, கத்தியால் கணவன் மனைவியை குத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். மர்ம நபர்கள் குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!