India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மணல் விற்பனையை ஒழுங்கு படுத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில் மணல் விற்பனை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவிற்கு விளையாட்டு பொருள் விற்பனை செய்ய வந்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது சலீம்(25). இவர், அங்கு 17 வயது சிறுவன் சிகரெட் குடித்தபோது அதனை தருமாறு கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, 17-வயது சிறுவன், சலீமை மதுபாட்டிலால் குத்தியதில் சலீம் காயமடைந்தார். இதையடுத்து சிறுவனை கைது செய்தனர்.
மதுரையில் நேற்று (ஏப்.25) 103 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.
மதுரையில் மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுக் கூட்டம் பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் மதுரை பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் மதுரை நகர் தலைவர் திரு மகா சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வாக்கு பதிவின் போது தங்கள் கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு, வாக்கு சதவீதம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்கள் நிகழ் நிதியாண்டுக்கான காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கு வெள்ளிக்கிழமை (ஏப்.26) கடைசி நாள் என மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் க. வாஞ்சிநாதன் அறிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் போது மரணம் ஏற்பட்டால் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பணியாளா்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மதுரை காமராஜ் பல்கலையில் பிஎச். டி, வாய்மொழித் தேர்வு (வைவா ) முடித்தும், சிண்டிகேட் ஒப்புதல் கிடைக்காததால் 190 Ph.D மாணவர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் உள்ளனர். தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 4000க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. UGC வழிகாட்டுதல்படி இப்பணிக்கு Ph.D அவசியம்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சர்ச்சையான போஸ்டர் அச்சடித்து ஒட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் பாஜக முக்கிய நிர்வாகிகளான வெற்றிவேல், சசிகுமார், சின்னசாமி, சின்ன இருளப்பன் ஆகியோர்கள் தேர்தல் பணிக்குழு மூலம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை அழகர் மலையிலிருந்து கடந்த 21 ஆம் தேதி புறப்பாடான கள்ளழகர் 23 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளினார். இந்நிலையில் நேற்று இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை பூ பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர் மலைக்கு புறப்பட்டார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க அழகரை மனமுருக வழியனுப்பி வைத்தனர்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், மதுரை விமான நிலையத்திற்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
மதுரை தவிட்டுச்சந்தை பழைய மாகாளிபட்டி சாலையைச் சோ்ந்தவா் தனசேகரன் (41). வழக்கறிஞரான இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு வெளியே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராஜா (34) என்பவர் மது போதையில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளார். அதை தட்டி கேட்ட வழக்கறிஞரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த வழக்கறிஞர் அளித்த புகாரில் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.