India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை விமான நிலையத்தில் நேற்று எம் பி விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் மோடியின் பேச்சுகளும், நிலைப்பாடுகளும் மாறி வருகிறது. 400 இடங்கள் என்று சொல்லிய நிலையில் தற்போது ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக உள்ளதால் மக்களிடம் வெறுப்பு, பிரிவினையை கொண்டு வர அவர் இப்படி பேசுவதாக தெரிவித்தார். மேலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என தெரிவித்தார்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினம் , வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை வளையங்குளம், நான்குவழிச்சாலையில் 5ம் தேதி (நாளை) நடக்கிறது. மாநாட்டு திடலை நேற்று பார்வையிட்ட மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிகர் தினத்தை முன்னிட்டு, நாளைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம், மதுரை கோட்டத்திற்கு 2022-23, 2023-24ம் ஆண்டுகளில் 350 பஸ்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருகின்றன. காலாவதியான 85 பஸ்கள் கழிக்கப்பட்டன . மேலும் 213 பஸ்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மதுரை நகருக்கான 133 தாழ்தள பஸ்களும் தயாராகின்றன. பஸ்கள் படிப்படியாக கழிக்கப்படும்” என்று கூறினார்
பாம்பன் ரயில்வே பாலம் கட்டுமான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்தது. இதுகுறித்து நேற்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை கோட்டம், நவீன வசதிகளுடன் ரூ. 550 கோடியில் புதிய பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் புதிய ரயில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகா், மேலூா், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படாதவாறு, சீரான குடிநீா் விநியோகம் நடைபெறுவதை உள்ளாட்சித் துறை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
” தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது மிகவும் மோசமான செயலாகும். மீண்டும் நரேந்திர மோடி தான் மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராவாா் . மாற்றங்களுக்குத் தயாராவோம் ” என்றாா்.
மதுரை SDPI கட்சியின் வழக்கறிஞர் சமீர் திருமண நிகழ்விற்கான அழைப்பிதழை அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவிடம் நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெயிலின் தாக்கத்தில் கால்நடைகளை பாதுகாப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வேண்டும், போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும், கால்நடை தீவனங்களை வெட்ட வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும், அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும், திறந்த வெளியிலான இடங்களில் கால்நடைகளை கட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும், மாணிக்கம் என்பவருக்கும் நில தகராறு காரணமாக முன்பகை இருந்துள்ளது. நேற்று கோவில் திருவிழா மஞ்சள் நீராட்டு விழாவின் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கைகலப்பாக மாறி இருதரப்பும் கம்பு கற்களால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் 8 பேர் காயமடைந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
மதுரையில் அமைந்துள்ள கூடலழகர் கோவில் 108 திவ்ய வைணவ தேசங்களில் ஒன்றாகும். சிலப்பதிகாரம், பரிபாடலிலும் மூலவரை குறிப்பிட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், அஷ்டாங்க விமானம், எட்டுப் பிரகாரங்களுடன், இக்கோயில் உள்ளது. சைவம் வைணவமும் ஒரே மதம் தான் என்பதை காண்பிக்கும் வகையில் புராணக்கதை படி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுவது உலகப்புகழ் பெற்றதாகும்.
Sorry, no posts matched your criteria.