Madurai

News April 29, 2024

பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை மத்திய சிறையில் அடைப்பு

image

தமிழ்நாட்டையே கலக்கிய, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி வழக்கில், அவர் குற்றவாளி என நீதிபதி பகவதி அம்மாள் இன்று தீர்ப்பளித்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மதியம் தண்டனை விவரம் வெளியாகவுள்ளது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிர்மலாதேவி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News April 29, 2024

ஓடும் ரயிலில் இளம்பெண் ஊழியருக்கு கத்திக்குத்து

image

மதுரை ரயில்வே கோட்டத்தில், கார்டாக வேலை பார்ப்பவர் ராக்கி. இன்று பிற்பகல், திருநெல்வேலி ரயிலில் கார்டாக திண்டுக்கல்லில் ஏறியுள்ளார். ரயில் மதுரை கூடல்நகர் பகுதியில் சிக்னலுக்காக நின்ற போது, திடீரென்று ரயில் பெட்டியில் ஏறிய இருவர், கார்டு கையிலிருந்த கைப்பையை பறித்துள்ளனர், அவர் தர மறுக்க, கத்தியால் தலையில் லேசான காயத்தை ஏற்படுத்தி பையை பறித்து சென்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 29, 2024

மதுரையில் ட்ரோன் பறக்க தடை…!!

image

மதுரை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு செய்யபட்ட வாக்குப்பெட்டிகள் மதுரை மருத்துவ கல்லூரி வளாக வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 04.06.2024 அன்று வரை வாக்கு எண்ணும் மையம் உள்ள பகுதிகளில் சுமார் 2 கிமீ சுற்றளவிற்கு ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறக்க விட தடை விதித்து ஆட்சியர் சங்கீதா அதிரடி உத்தரவிட்டுள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை.

News April 29, 2024

மதுரையில் மழைக்கு வாய்ப்பு

image

கோடை ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மதுரை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்.29) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (7 மணி வரை) மதுரையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 29, 2024

மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் விடுதலை

image

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விருதுநகர் 2வது நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  2ஆம், 3ஆம் குற்றவாளிகளான பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

News April 29, 2024

மதுரை நீதித்துறையில் வேலைவாய்ப்பு

image

மதுரை மாவட்ட நீதித்துறையில் 73 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்த <>LINK<<>> க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

இங்கெல்லாம் நாளை குடிநீர் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் பகுதியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடைபெறுகிறது. இதனால் நாளை(ஏப்ரல்.30) ஒருநாள் அய்யனார் கோவில் பகுதி மீனாட்சிபுரம்,பி.பி. குளம், நரிமேடு, தல்லாகுளம், சொக்கிகுளம், கே.கே நகர், கற்பக நகர், லூர்து நகர், புதூர், ஆத்திகுளம், ரிசர்வ்லைன், வள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News April 29, 2024

கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர்

image

தென் மண்டல காவல் துறைத் தலைவா் அலுவலகத்தில், மதுரை பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் காளிதாஸ் அளித்த புகாா் மனு: தோ்தலுக்கு, கட்சியிலிருந்து கொடுக்கப்பட்ட நிதியை தொகுதி அமைப்பாளா் வெற்றிவேல், மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் ஆகியோா் முறையாகப் பயன்படுத்த வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு நான்தான் காரணம் என்று அவர்கள் என்னை அவதூறாகப் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுக்கின்றனர்”என்று கூறியுள்ளார்.

News April 29, 2024

புதிய ரயில்பாதை திட்டம் நிறுத்தி வைப்பு

image

ரயில்வே பயணிகளின் வசதிக்காக செய்யப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமானது, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

News April 29, 2024

குடிநீர்த் திட்டம் சோதனை வெற்றி

image

மதுரையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், 1295.76 கோடி செலவில் செயல்படுத்தப்படும், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்த வாரம் முதல், மதுரையில் 100 வார்டு களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் தொடங்கப்பட உள்ளது.

error: Content is protected !!