Madurai

News May 9, 2024

மதுரையில் துவங்கும் கிராமிய போட்டிகள்

image

காந்தி மியூசிய வளாகத்தில் உலக மியூசிய தினத்தை முன்னிட்டு வரும் மே.11 முதல் 16 வரை சிறியவர், பெரியவர்களுக்கு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாக காப்பாட்சியர் மருதுபாண்டியன் நேற்று அறிவித்துள்ளார். மே.11 இல் பல்லாங்குழி, 12 இல் தட்டாங்கல், 13 இல் தாயம், 14 இல் நொண்டி, 15 இல் கிட்டிப்புல், 16 இல் கோலிக்குண்டு போட்டிகள் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் 97900 33307  முன்பதிவு செய்யலாம்.

News May 9, 2024

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

image

மதுரையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் மதுரை வைகை ஆற்று வடகரை பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தாழ்வான நிலையில் உள்ள சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

News May 9, 2024

தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற மகன் 

image

ஒத்தக்கடை அருகே உறங்கான்பட்டியை சேர்ந்தவர் செல்லபாண்டி(41). இவரது மனைவி சத்தியா. செல்லபாண்டி மனைவியை பிரிந்து வேறொரு பெண்ணோடு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்லபாண்டி அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவரது 17 வயது மகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவில் தந்தையை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News May 9, 2024

சிசிடிவி பழுது – ஆட்சியர் விளக்கம்

image

மதுரை மக்களவை தொகுதி வாக்குப்பதிவு மையத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா மின்னல் தாக்கியதால் ஒரு சில கேமராக்கள் இயங்காமல் பழுதானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆட்சியர் சங்கீதா தற்போது அனைத்து கேமராக்களும் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இனி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை உபகரணங்கள் பொருத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 8, 2024

மாநகர காவல் ஆணையாளர் அதிரடி உத்தரவு

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் இன்று (08.05.2024) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 39 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையாளர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

News May 8, 2024

செட் தேர்வுக்காக இலவச பயிற்சி..!

image

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதி தேர்வினை (செட்) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கணினி வழியாக ஆன்லைனில் வருகிற ஜூன் 3-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் மே 16-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தினமும் (ஞாயிறு தவிர) மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மதுரை, காக்காதோப்பு மூட்டா அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

News May 8, 2024

சவுக்கு சங்கம் மீது துடைப்பம் வீச்சு?

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை பெண் அதிகாரிகள் குறித்து ஆதரவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணை முடிந்து காவல்துறை வாகனத்தில் சென்ற சவுக்கு சங்கர் மீது அங்கு கூடியிருந்த மகளிர் அமைப்பினர் துடைப்பத்தை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News May 8, 2024

தேசியநெடுஞ்சாலை துறைக்கு ரூ.25000 அபராதம்!

image

சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்கும் கருவி செயல்படாததால், ஒரு வாகன ஓட்டியிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்த குற்றத்துக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கழகத்துக்கு மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் இன்று ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. அமெரிக்கன் கல்லூரி துணை தலைவர் மார்ட்டின் டேவிட், 2020ஆம் ஆண்டு சுங்கச்சாவடியை கடந்த போது அவர் மோசமாக நடத்தப்பட்டது குறித்து தீர்ப்பு அளித்துள்ளது.

News May 8, 2024

மே.22 வரை சவுக்கு சங்கருக்கு காவல்

image

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4.ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

News May 8, 2024

மதுரை: பெண் குழந்தை சாக்கடையில் சடலமாக மீட்பு 

image

மதுரை பெத்தானியாபுரம் அருகே உள்ள மாதா கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாயில் இன்று பெண் சிசு சடலமாக கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த கரிமேடு போலீசார் சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை மீட்டு சிசுவை வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!