Madurai

News June 8, 2024

மதுரை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) மதுரை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

மதுரை: மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த உத்தரவு

image

மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த முதன்மை கல்வி அதிகாரி(சி. இ. ஓ.,) கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளி திறந்த முதல் நாளில் இருந்தே அரசு, உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தவும், தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை 100% மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

News June 8, 2024

அரசு மகளிர் கல்லூரியில் 10 ஆம் தேதி முதல் கலந்தாய்வு

image

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி தொடங்குவதாக கல்லூரி முதல்வர் வானதி நேற்று தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 10, 12, 13 ஆம் தேதி ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

News June 8, 2024

மதுரை: TNPSC குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநா் சண்முகசுந்தா் நேற்று(ஜூன் 7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குரூப்-1 90 காலிப் பணியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் TNPSC குரூப்-1 தோ்வுக்கான விண்ணப்ப படிவம், ஆதாா் அட்டை, 2 கடவுச்சீட்டு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகலாம்” என்று கூறியுள்ளார்.

News June 8, 2024

“கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றிதான்”

image

“கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றிதான், உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விட கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே? என நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். “குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை” என மோடி தெரிவித்த கருத்திற்கு ‘X’ தளத்தில் பதில் அளித்துள்ளார்.

News June 7, 2024

கெட்டவர்களின் கனவு தகர்வது நல்லவர்களின் வெற்றி-சு. வெ

image

கெட்டவர்களின் கனவு தகர்வதே நல்லவர்களின் வெற்றி தான், உங்களின் 400 என்ற கனவை வாக்காளர்கள் தகர்த்ததை விட கொண்டாட வேறு என்ன விசயம் வேண்டும் பிரதமரே? என நரேந்திர மோடிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். “குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்கட்சிகள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை” என மோடி தெரிவித்த கருத்திற்கு இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

News June 7, 2024

தா.பாண்டியனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தா.பாண்டியனுக்கு உசிலம்பட்டி அருகே மணிமண்டபம் அமைக்க அவரது உறவினர் தடை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம், ” சட்டத்திற்கு புறம்பாக கட்டுமானம் மேற்கொண்டால், மீண்டும் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

News June 7, 2024

மதுரை மாவட்டத்தில் புதிதாக 2 சுங்கச்சாவடிகள்

image

மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி, நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம், ஆர்டிஐ- மூலம் சுங்கச்சாவடி குறித்து கேட்டிருந்தார். அதற்கு, ” மதுரை மண்டலத்தில் 28, சென்னை மண்டலத்தில் 31 என மொத்தம் 59 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பட்டு வருகிறது.மதுரை மண்டலத்தின் கீழ் கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் திறக்கப்படள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 2 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது” என ஆணையம் தெரிவித்துள்ளது.

News June 7, 2024

மாமியார் ஜாதியை சொல்லி திட்டியதால் மருமகள் தற்கொலை

image

சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்தவர் போதும் பொண்ணு(23). தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் இவர் மாற்று ஜாதியை சேர்ந்த பாலகுமாரனை திருமணம் செய்து கொண்டார். பாலகுமாரன் தாயார் இவரை ஜாதியை குறை கூறி பேசி வந்துள்ளார். இதனால் போதும் பொண்ணு நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்டிஓ விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது. சமய நல்லூர் போலீசார் தாய் மற்றும் மகனிடம் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 7, 2024

ஓராண்டுக்குள் சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்

image

மதுரை செல்லூர் கண்மாயில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ. 4.65 கோடி மதிப்பீட்டில் கண்மாயைச் சுற்றி வேலி மற்றும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் நடைபாதை, மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது 10அடி உயர மின் கம்பத்திற்கு 1/2 அடி கூட ஆழமிட்டு அடித்தளமிடாததால், ஓராண்டு முடிவதற்குள் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது.

error: Content is protected !!