Madurai

News June 10, 2024

கோரிக்கை மனுவை பெற்ற ஆட்சியர்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக 2 மாதங்களுக்கு பின் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்ற ஆட்சியர் குறைகளை கேட்டறிந்தார்.

News June 10, 2024

இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு ஓட்டு – விமர்சனம்

image

மதுரை ஆதினம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடி நேற்றைய தினம் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அதற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள். சீமானும் அண்ணாமலையும் அதிகமான ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள். தமிழக மக்களிடம் ஒரே ஒரு குறை தான், இலங்கைத் தமிழர்களை கொன்றவர்களுக்கு ( திமுக, காங்கிரஸ் கூட்டணி) ஓட்டு போட்டுள்ளனர்” என்றார்.

News June 10, 2024

மதுரையில் தமிழக வெற்றி கழக‌ முதல் மாநாடு!

image

மதுரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று 550 பேருக்கு தையல் மிஷின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை த.வெ.க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றி கழக‌த்தின் முதல் மாநாடு மதுரையில் நடைப்பெற உள்ளதாக தெரிவித்த அவர், மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாக தெரிவித்தார்.

News June 10, 2024

மதுரையில் குவிந்த மக்கள் கூட்டம்!

image

தென்மாவட்டங்களின் நுழைவாயிலாக உள்ள மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் நேற்று மாலை அலைமோதியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்படுவதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரயில் பயணிகள் மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக அதிகளவில் பயணிகள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News June 10, 2024

மதுரை மக்களுக்கு  நன்றி அறிவிப்பு

image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் செயலா் கணேசன், புறநகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் “மதுரை மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசனை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும்
வெற்றி பெற வைத்த மதுரை மக்களுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றியை தெரிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளனா்.

News June 10, 2024

தாறுமாறாக வந்த ஜீப் மோதி மூவர் பலி

image

நேற்று மாலை, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த பாஜக கட்சிக்கொடி கட்டிய ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, டீ கடையில் நின்றவர்கள் மற்றும் பேரிகார்டு மீது மோதி, தாறுமாறாக ஓடி மின்சாரக் கம்பத்தில் மோதி நின்றது. இதில் செங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து (54), விவசாயி விஜயராமன்(53), விவசாயி மூக்கையா(50) சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

News June 10, 2024

NDA கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது – ஈவிகேஎஸ் இளங்கோவன்

image

மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், ”
முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற விஷயங்களில் பாரதிய ஜனதா கட்சி அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனதா தளம் ஆகியவற்றுடனான முரண்பாடான நிலைப்பாட்டால் , நீண்ட காலம் இந்த NDA கூட்டணி நீடிக்காது” என்றார்.

News June 9, 2024

ரயில் பயணிகளே இதை கவனியுங்கள்!

image

மதுரை – சண்டிகர் ரயிலின் இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 9) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சண்டிகர் விரைவு ரயில் (12687) திங்கட்கிழமையன்று (ஜூன் 10) அதிகாலை 01.30 மணிக்கு 115 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

News June 9, 2024

ஆபரேஷன் ரயில் சுரக்சா – 4 பேர் கைது

image

மதுரை ரயில்வே நிலையத்தில் “ஆபரேஷன் ரயில் சுரக்சா” என்ற பெயரில், RPF மற்றும் CIB பிரிவு ரயில்வே போலீசார் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் படி இருந்த 4 பேரைப் பிடித்து விசாரிக்கையில், அவர்கள், ரயில்வே பொருட்களை திருடியுள்ளது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 4 பேரையும் நேற்று கைது செய்து, அவர்கள் திருடிய பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 9, 2024

மதுரையில் 23,160 பேர் “ஆப்சென்ட்”

image

மதுரை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வில் 23, 160 பேர் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 11 தாலுகாவிற்கு உட்பட்ட 393 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 724 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில், 84,564 பேர் மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 23,160 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!