Madurai

News June 11, 2024

தந்தை-மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு

image

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜூன்.14-க்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி அதிகாரி அனில் குமார் ஆஜராகாததால் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

News June 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் பங்கேற்று பயனடைய ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26 & 27 ஆகிய நாட்களிலும், உடலியக்க குறைபாடு, காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ஆம் தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

News June 11, 2024

நித்தியானந்தா வழக்கு, ஒத்திவைத்தது நீதிமன்றம்

image

மதுரை ஆதினம் நியமனம் குறித்து நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, புதிய ஆதினம் நியமிக்கப்பட்டார். புதிய ஆதினம் நியமனத்தை மாவட்ட நீதிமன்றமும் அங்கீகரித்தது. மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்று தரப்பும் அவகாசம் கோரியதால் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News June 11, 2024

நிறைவு பெற்ற மின் மயமாக்கல் பணி

image

மதுரை போடி இடையேயான 96 கி.மீ. தொலைவிற்கு கடந்த 6 மாதங்களாக மின் மயமாக்குதல் பணிகள் நடைபெற்று வந்தது. அகல ரயில் பாதை வழியாக அதற்கான மின்சார வயர்கள் தாங்கி செல்லும் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு மின்சார வயர்கள் பொருத்தப்பட்டு பணிகள் முடிந்து தற்போது தயாராக உள்ளது. எனவே விரைவில் இந்த ரயில்வே தடத்தில் மின்சார எஞ்சின் ரயில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

News June 11, 2024

நுகர்வோர் நீதிமன்ற வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

image

மதுரையைச் சேர்ந்த காஜா மைதீன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர்களை நியமனம்” செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இன்று, வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், “மாநில நுகர்வோர் பிரச்சனை தீர்வு ஆணையத்தின் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது”.

News June 11, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை-30 ஆண்டுகள் சிறை

image

மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் செல்வக்குமார் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தாய் அளித்த புகாரில் செல்வகுமார் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் செல்வகுமாருக்கு 30 ஆண்டுகள் சிறையுடன் ரூ.30,000 அபராதம் விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

News June 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா கைபேசி

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11-6-2024) மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான விலையில்லா கைபேசிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா வழங்கினார். மேலும் தகுதி வாய்ந்த ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக விலையில்லா கைப்பேசிகளை பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News June 11, 2024

தமுக்கம் மாநாட்டு மைய அரங்க ஆன்லைன் மூலம் முன்பதிவு

image

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையம் அரங்கத்தை இணைய வழி மூலம் முன் பதிவு செய்வதற்கான சேவையினை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ்குமார், ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

வெறிநாய் அச்சத்தை போக்குக-ஆர். பி. உதயகுமார்

image

திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியில் வெறிநாய் கடித்து 12 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறிநாய் நடமாட்டத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் திருமங்கலம் தொகுதியில் சுற்றிதிரியும் வெறிநாய்களை பிடிக்க நகராட்சி, ஊராட்சிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி மக்களின் அச்சத்தை போக்க திருமங்கலம் எம்.எல்.ஏ ஆர். பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

News June 11, 2024

விருது பெற்ற மதுரை மருத்துவர்கள்

image

சென்னையில் டைனர்ஜிக் பிசினஸ் சொல்யூஷன் சார்பில் நேற்று நடந்த ‘கோல்டன் எய்ம் கான்பரன்ஸ்’ விழாவில் மதுரையைச் சேர்ந்த 3 டாக்டர்களுக்கு ஆற்றல்சார் விருதுகள் வழங்கப்பட்டன. வடமலையான் மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர் பிரேம் ஆனந்த், மீனாட்சி மிஷன் ரேடியேஷன் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருஷ்ணகுமார், ஆசீர்வாதம் மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெபசிங் ஆகியோர் விருது பெற்றனர்

error: Content is protected !!