India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் 1,545 பள்ளிகளைச் சார்ந்த 1,14,095 மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பசியோடு பள்ளிக்கு வரும் பிள்ளைகளை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக் கூடாது என்ற நோக்கில் நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை இன்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்திலும் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள மாநில பொது சுகாதாரத்துறை, டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளில் மதுரை மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை சைபர் கிரைம் போலீஸ் சார்பில் இன்று விடப்பட்டுள்ள எச்சரிக்கையில், ” மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு போன் செய்து, அரசின் உதவித்தொகை வழங்குவதாகவும், QR Code ஸ்கேன் செய்யுமாறும் கூறினால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் QR Code ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஏன் முற்றிலும் தடுக்க இயலவில்லை என உயர் நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது. இன்று நடந்த கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணையின் போது, போதைப்பொருள் எப்படி தமிழகத்திற்குள் வருகிறது எனவும், தமிழக எல்லை மற்றும் மாவட்ட எல்லைகளில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளை கடந்து தான் தமிழகத்தில் கஞ்சா விற்கப்படுகிறது எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டின்படி கலந்தாய்வு (Counselling) மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் 10.06.2084 முதல் www.skilltrainine.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள். 07.06.2004 மேலும் விவரங்களுக்கு 0452-2560544, 9843065874 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
மதுரை, அழகர்கோவில் மலைப்பாதை இன்று மூடப்பட்டது. அழகர் கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் சாலையில் பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று ஒரு நாள் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. முன்னறிவிப்பு இன்றி, அழகர்கோவில் மலை சாலை மூடப்பட்டதால், மலை மீது உள்ள பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் போன்றவற்றிற்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.
திருமங்கலம் தென்பழஞ்சியை சேர்ந்தவர் முத்துமுருகன் (26). கம்பி கட்டும் தொழிலாளியான இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த முத்து முருகனின் மீது கண்ணன் உள்ளிட்ட சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், முத்து முருகன் காயம் அடைந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய கண்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்தனர்.
புதிதாக அமைக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான புதிய வரைபடம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வணிக வளாகத்திற்கு பொதுமக்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரையில் உணவகங்களில் புரோட்டா சுடுவதற்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. மதுரை கலைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பரோட்டா பயிற்சி வகுப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் பரோட்டா சுட பயிற்சி பெற்று வருகின்றனர். 10 நாட்கள் வழங்கப்படும் இப்பயிற்சி முடித்தவர்கள் பல்வேறு உணவகங்களில் வேலைவாய்ப்பை பெறுவதாக பயிற்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
மதுரைக் காமராஜா் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலை நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. 2024-2025-ஆம் கல்வி ஆண்டு கலை, அறிவியல் சாா்ந்த முதுநிலைப் பட்டப் படிப்புகள், இளநிலைப் பட்டப் படிப்புகள், சான்றிதழ், பட்டயம், உயா்நிலை பட்டயம், முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.