Madurai

News March 12, 2025

மதுரை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்,அச்சம் எதற்கு உங்கள் அழைப்பின் அவசியமும், அவசரமும் நாங்கள் அறிவோம், பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை உணர்ந்தால் உடனே அழையுங்கள் காவல் உதவி எண் 100 மற்றும் பெண்கள் உதவி எண் 181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்

News March 12, 2025

மதுரையில் இன்று போக்குவரத்து தடை

image

மதுரை, வைகை வடகரையில் யானைக்கல் மேம்பாலத்தின் இறக்கம், மேளக்காரத்தெரு பகுதியில் பாலத்தின் மேல்தளத்தில் கட்டுமானம், சாலைப்பணிகள் நடக்க உள்ளது. இதையொட்டி இன்று(மார்ச்.12) இரவு 10:00 மணி முதல் நாளை(மார்ச்.13) காலை 6:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யானைக்கல் பாலம் வழி எம்.எம்.லாட்ஜ் சந்திப்புக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. *ஷேர் 

News March 11, 2025

வாழ்க்கையில் நிம்மதி இல்லையா? இந்த கோவிலுக்கு போங்க

image

குடும்பத்தில் ஓயாத பிரச்சனை, வாழ்க்கை துணையுடன் பிரச்சனை, திருமணம் தள்ளிப் போவது, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் பிரச்சனைகள் இருந்தால் மதுரையில் உள்ள மிகவும் பிரபலமான இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் இந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது .

News March 11, 2025

மதுரை :ஓரின சேர்க்கை செயலியில் பழகி மோசடி

image

கிரிண்டர்’ (grindr)என்ற ஓரின சேர்க்கையாளர்கள் நட்புக்கான செயலி மூலம் தர்மபுரி குணசேகரனிடம் 34, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த முனீஸ்வரன் 32, பழகி மதுரையில் நேரில் சந்தித்துள்ளனர். இருவரும் புனலூர் ரயிலில் சென்றபோது குணசேகரனுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து 2 தங்க மோதிரங்கள், அலைபேசி ஆகியவற்றை முனீஸ்வரன் கொள்ளையடித்து தப்பியுள்ளார். இச்செயலி மூலம் இதுபோன்ற மோசடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது

News March 11, 2025

மதுரையில் நில அளவீடு இணையத்தில் விண்ணபிக்கலாம்

image

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,தமிழக முதலமைச்சர் உத்தரவுப்படி இணையவழியில் விண்ணப்பிக்கலாம். என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்த <>லிங்கை <<>>பயன்படுத்தலாம். நில சம்பந்தபட்ட தொழில் செய்பவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News March 11, 2025

கருணை கொலை செய்ய ஆட்சியரிடம் புகார்

image

திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரிய கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி. இவருக்கு மணிகண்டன் மற்றும் தருண் என்ற 2 செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர். அவர்களது மருத்துவ செலவிற்காக பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடந்தாரர்கள் தர குறைவாக பேசுவதால் தனது குழந்தைகளை கருணை கொலை செய்யுமாறு தாய் ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 11, 2025

ஒழுங்குமுறை வேளாண் கூடத்தில் தூய மல்லி நெல்

image

மதுரை திருமங்கலம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 22 முட்டை தூய மல்லி நெல் ஏலத்திற்கு வந்துள்ளதாக வேளாண் விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் இந்த ஆவாரம் பூவை மொத்த விற்பனையில் வாங்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் 9025152075/9600802823.

News March 10, 2025

சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் 

image

 தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதவரை, பணியில் சேர்க்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கில் இன்று தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில்  தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும். சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்றும் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

News March 10, 2025

மதுரை : இலவச பேருந்து பயணச்சலுகை வேண்டுமா?

image

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் 25.3.2025 முதல் 28.3.2025 வரை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் 25.03.05 முதல் 27.03.205 வரையிலான மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News March 10, 2025

நாளை மதுரை மேற்கு மண்டலத்தில் குறைதீர் முகாம்

image

திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல் நாளை (மார்ச் 11) செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். எனவே இந்த மண்டலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!