Madurai

News June 14, 2024

திமுக நிர்வாகி இல்ல விழாவில் மு.க.அழகிரி

image

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று திமுகவின் நிர்வாகியும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணி செல்வம் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக மு.க.அழகிரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News June 14, 2024

இன்ஸ்பெக்டர் கைது – நீதிபதி வேதனை

image

கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா , ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பின் நீதிபதி, ”மனுதாரர் மீது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மக்களை காக்க வேண்டிய போலீசை கைது செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது” எனக் கூறி, விசாரணையை ஜூன் 18க்கு தள்ளி வைத்தார்.

News June 13, 2024

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

image

தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் தமக்கு ஜாமீன் கோரி 2வது முறையாக தாக்கல் செய்த மனு மீது இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணை நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த வாரம் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று 2வது முறையாக ஒத்திவைப்பு

News June 13, 2024

மதுரைக்கு வந்த மத்திய ஆய்வு குழு!

image

மதுரை மாவட்டத்தில் உள்ள 16 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கும் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. இக்குழு இன்று மதுரை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் மத்திய குழுவினரை வரவேற்று அவர்களுடன் ஆய்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.

News June 13, 2024

தேர்தல் ஊக்கத்தொகை கிடைப்பதில் தாமதம்

image

மதுரை மாநகர் காவல் துறையினருக்கு மக்களவைத் தேர்தலுக்கான சிறப்பு பணி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டது. இதற்கான ஊக்கத்தொகை,
மற்ற ஊர்களில் வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், ” ஊக்கத்தொகை கிடைக்க, சென்னை தலைமை காவல்துறை அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

News June 13, 2024

தொழில் பழகுநர் பயிற்சிக்கு அழைப்பு

image

அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில்சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு இயந்திரவியல், தானியங்கியல் ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.com ல் ஜூலை.8க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 13, 2024

மளமளவென விலை உயர்ந்த மதுரை மல்லி

image

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு மல்லிகைப்பூக்கள் வரத்து குறைவு மற்றும் கோவில் திருவிழாக்கள் மற்றும் சுபமுகூர்த்தம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தற்போது மல்லிகை பூ கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரையிலும், பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கும், முல்லை கிலோ ரூ.300 முதல் ரூ.500- க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.5க்கும் விற்பனையாகிறது.

News June 13, 2024

கலைஞர் நூலகத்தில் புதிய முறை அறிமுகம்

image

மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் புத்தகம் இரவல் பெற தனிநபர், குடும்பம், மூத்த குடிமக்கள், மாணவ, மாணவியர் என 4 வகை உறுப்பினர்களுடன், நிறுவனங்கள், கல்வி நிறுவன உறுப்பினர் என புதிய வகை உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கும் , தனியார் அலுவலகங்களுக்கும் முதல்முறை உறுப்பினர் கட்டணம் ரூ.1500, ஆண்டு சந்தா ரூ.500. இவ்விருவகையிலும் 25 புத்தகங்கள் வரை இரவல் பெறலாம்.

News June 13, 2024

தொழில் பழகுநர் பயிற்சிக்கு அழைப்பு

image

அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் தொழில் பழகுநர் பயிற்சியில்சேர தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு இயந்திரவியல், தானியங்கியல் ஆகிய படிப்புகளில் 2020 முதல் 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் ஆன்லைனில் www.boat-srp.com ல் ஜூலை.8க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 13, 2024

மீண்டும் பழைய கட்டிடத்தில் ஆட்சியர் அலுவலகம்

image

மதுரையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான பழைய கட்டிடத்திற்கு மீண்டும் ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்திற்கு ஆட்சியரின் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தொன்மை வாய்ந்த பழைய கட்டிடத்தை தொல்லியல் துறை மூலம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

error: Content is protected !!