India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதி விடுமுறை காலக் கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) ஜூன் 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த சிறப்பு ரயிலில் 11 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
9 வருடங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை பதில் தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, பாஜக சார்பில் மாவட்டம் மற்றும் மண்டலம் அளவில் யோகா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும், சிறப்பான முறையில் வழிநடத்துவதற்கும், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜக மாநில பொதுச்செயலாளர், இராம.சீனிவாசன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை பாஜக தலைவர் நியமித்துள்ளார்.
கடந்த 9 வருடங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள மதுரை உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை மீண்டும் திறந்து கிராம மக்கள் வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி சந்திரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. விசாரணையில் கோவிலை மீண்டும் திறந்து கிராம மக்களை வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மாவட்ட SP பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மகளிருக்கான சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் நாளை(ஜூன் 13) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஜிதா சைபர் குற்றம் தவிர்ப்பு குறித்து எடுத்துரைக்க உள்ளார். இந்த முகாமில் பங்கேற்ற அனுமதி இலவசம் என்பதால் பெண்கள் பங்கேற்று பயனடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து, கடை, தொழில், பாதாளச் சாக்கடை, குடிநீர் வரிகள், குத்தகை வருவாய் வசூலிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 1800க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகளில் நீண்ட நாட்களாக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. அவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நிலுவை வரியை வசூலிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக ஆணையாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டு சந்தையில் இன்று வாராந்திர ஆட்டு சந்தை நடைபெற்றது. வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட அதிகளவிலான ஆடுகள் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கில் வியாபாரிகள், இஸ்லாமியர்கள் ஆடு வாங்குவதற்காக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 7 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் உதவியுடன், அமுதம் கூட்டுறவு அமைப்பு மூலம், தற்போது மதுரை பை-பாஸ் சாலை பொன்மேனியில் ‘ஆயுஷ்’ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
சிறப்பு என்னவென்றால், ஒரே இடத்தில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமி யோபதி , யோகா மற்றும் இயற்கை மருத்துவ பாரம்பரிய சிகிச்சைகள் கிடைப்பதுதான்.
இந்த மருத்துவமனை, மத்திய அரசு நிதியுதவியின் கீழ் செயல்படுகின்றது.
மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியருக்கான பள்ளி விடுதிகள் 27, கல்லூரி விடுதிகள் 8 என 35 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய பள்ளி மாணவ மாணவிகள் வரும் 14ம் தேதிக்குள், கல்லூரி மாணவர்கள் வரும் ஜூலை 17க்குள் விடுதி காப்பாளர்களிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு.
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை , தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர், பின்னர் ” இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதமான வேளாண் விளைபொருள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.