India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள் கடந்த 12ம் தேதி கொலை செய்யப்பட்டு வெள்ளை நிற நைலான் சாக்குப்பையால் முகத்தை மறைத்து கட்டி கிணற்றில் வீசப்பட்ட பெண் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாமல் உள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் R. ராஜா என பச்சை குத்தப்பட்டுள்ள நிலையில் இப்பெண் குறித்து விவரம் அறிந்தவர்கள் 9498101430 என்ற எண்ணிற்கு உடன் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று (மே.18) பெய்த மழை அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, உசிலம்பட்டியில் 9 செ.மீட்டரும், குப்பண்ணம்பட்டி, ஆண்டிப்பட்டி, சாத்தியார் ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், வாடிப்பட்டி பகுதியில் 3 செ.மீட்டரும் பெரியபட்டியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
மேலூர் அருகே பழைய சுக்காம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றிரவு நடைபெற்ற நாடகத்தின் போது, அதைப் பார்ப்பதற்காக இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிரி (61), அவரது மகன் மங்கள பிரபு(30) ஆகியோரை அதே பகுதியை சேர்ந்த ராகுல், வினோத், சாஸ்தா, கருப்பு, தினேஷ், ரஞ்சித் சேர்ந்து தாக்கினர். மேலூர் போலீசார் 6 பேரையும் இன்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை அரசு அருங்காட்சியகம் மற்றும் கூடல் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மூன்று நாட்கள் ஒயிலாட்டம் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. 21.05.2024 முதல் 23.05.2024 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 86083 90844 மற்றும் 94434 54446 ஆகிய அலைபேசி எண்களில் அழைத்து முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்பட்டது. மத்திய கல்விக்குழு பிரதிநிதியாகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் வி.காமகோடி நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6,485 மாணவியர்கள் மாதந்தோறும் ரூபாய் 1000 பெற்று பயனடைந்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டு தகுதியான மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
மதுரை கண்ணனேந்தல், ஓய்வுபெற்ற ஆசிரியரான பரசுராமன், சொத்து வரி மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். சொத்து வரி மாற்றம் செய்வதற்கு, பில் கலெக்டர் ஆறுமுகம் அவரது உதவியாளர் சுதாகர் 20000 ரூபாய் லஞ்சப்பணமாக கேட்டுள்ளனர். இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளிக்க, அவர்கள் லஞ்சம் வாங்கியபோது ஆறுமுகம் மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா மதுரை விமான நிலையத்திற்கு இன்று காலை 9.40 மணிக்கு
வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு இரவு 7.00 மணிக்கு மீண்டும் பெங்களூர் செல்ல உள்ளார். அவர் வருகையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் ரயில் ஓட்டுநர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக 5 கோடியில் புதிய நவீனஅறை கட்டப்பட்டுள்ளது. லோகோ பைலட் மேலாளர்கள் ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் ஓடும் தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். நவீன அறையில் ஆண் பெண் இருவருக்கும் தனி அறை தியான அறை , உடற்பயிற்சி கூட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வு விடுதிக்கு ரயில் மரம் ஓடும் தொழிலாளர்கள் கூடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார் கமுதி மாணவி காவியா ஜனனி.
அவரின் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கான செலவை, எல்ஐசி ஆஃப் இந்தியா மதுரை கோட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. மதுரை எல்ஐசி முதுநிலை கோட்ட மேலாளர், மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
Sorry, no posts matched your criteria.