Madurai

News June 17, 2024

பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

image

மேலூர் தெற்குப்பட்டி சேர்ந்தவர் வேலுச்சாமி.இவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் இவரது மனைவி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவரது சகோதரர் முறையில் உள்ள முத்துப்பாண்டி (22) வேலுச்சாமியின் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை தட்டி கேட்ட அவரின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரின் மேலூர் போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

News June 17, 2024

சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி

image

மதுரை மாவட்டம், சாப்டூர் அருகில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, “சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில்” நடைபெறும் ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக வரும் 19ந் தேதி (புதன்கிழமை) முதல் 21ந் தேதி வரை (சனிக்கிழமை) வரை நான்கு நாட்கள், பக்தர்கள் மலையேற கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

News June 17, 2024

உலக சாதனை முயற்சியாக 2000 பேர் யோகா

image

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை 2000 பேர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு கலந்து கொண்டு உலக சாதனை முயற்சியாக விபரீத கரணி யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மஹரிஷி அறக்கட்டளை சார்பில் கோல்டன் புக் ஆப் உலக சாதனை முயற்சியாக விபரீத கரணி யோகாசனத்தை தொடர்ந்து 15 நிமிடம் நின்று சாதனை படைத்தனர்.

News June 17, 2024

நகை மோசடி செய்த பெண்ணிற்கு வலைவீச்சு!

image

மதுரை கருப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜமுனா. இவர் தெற்கு வாசல் பகுதியில் இந்திரா என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 33 சவரன் நகையை அடமானம் வைத்து 9 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி செலுத்திய நிலையில் அடமானம் வைத்த 33 சவரன் நகையை திருப்பி தராமல் மோசடி செய்ததாக ஜமுனா அளித்த புகாரில் இந்திரா மீது நேற்று மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News June 16, 2024

மதுரை: 1030 வன விலங்குகள் உயிரிழப்பு

image

மதுரை மாவட்டத்தில் 37,000 ஹெக்டர் வனபரப்பளவு உள்ளது. இதில், மான், குரங்கு, காட்டுபன்றி, யானை உள்ளிட்ட 100கணக்கான வன விலங்குகள் உள்ள நிலையில் கடந்த 2015 முதல் 2024 பிப். மாதம் வரை மதுரை வனக்கோட்டத்தில் 435 மயில்கள், 258 புள்ளி மான்கள், 71 காட்டு மாடுகள் 40 குரங்குகள் உள்ளிட்ட 1030 வன விலங்குகள் உயிரிழந்துள்ளன. இதில், 93 வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது RTI மூலம் தெரியவந்துள்ளது.

News June 16, 2024

மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

மதுரை மாநகராட்சி வைகை கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய்களில் இணைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 19ஆம் தேதி வார்டு எண்.10 முதல் 16 வார்டுகள் மற்றும் வார்டு எண்.21 முதல் 35 வரை உள்ள ஆகிய வார்டு பகுதிகளுக்கும், வரும் 21ம் தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு எண் 46, 47, 48, 49, 53, 70, 72 74 வரை உள்ள ஆகிய வார்டுப் பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தம் செய்யபடுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 16, 2024

காவல்துறையினருக்கு முக்கிய அறிவுரை!!

image

மதுரை மாநகர் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகரில் ‘நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் காவல்துறையினர் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும். மீறும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்’ என கடுமையாக எச்சரித்துள்ளார்.

News June 16, 2024

காந்தி மியூசியத்தில் இலவச யோகா பயிற்சி

image

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 காலை 7:00 முதல் 7:40 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம் எனவும் பயிற்சிகள் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் ஒருங்கிணைப்பாளர் தேவதாசை 99941 23091ல் தொடர்பு கொள்ளலாம் என காந்தி மியூசிய நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 16, 2024

மதுரையில் பிரம்மாண்ட வணிக வளாகம்!

image

மதுரை பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.119 கோடியில் 474 கடைகள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும் வாகன நிறுத்த வசதியுடன் கூடிய பிரம்மாண்ட வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 16, 2024

அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

image

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில், ஓராண்டு அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், இந்து சமய கோட்பாடுகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

error: Content is protected !!