India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் – ஹுப்பாளி – ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை ஜூன் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் ஆறு மாதங்களுக்கு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
மதுரை கோட்டத்தில் வைகை, குருவாயூர், பாலக்காடு – பழனி – சென்னை, தூத்துக்குடி – மைசூர் ரயில்களில் கடந்த 5 நாட்களாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.1,64,415 வசூல் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மதுரையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரும் அந்தோதயா சிறப்பு விரைவு ரயிலில் நேற்று திருச்சியில் டிக்கெட் பரிசோதகர் எனக் கூறி ஒருவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு டிக்கெட் பரிசோதகர் சரவணா செல்வி நடத்திய விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் போலியான அடையாள அட்டையை வைத்து டிக்கெட் பரிசோதகர் என வலம் வந்தது தெரியவந்தது. பின்னர் மதுரை ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெற்றது உண்மையான வெற்றி அல்ல, மக்களை விலை பேசி வாங்கப்பட்ட வெற்றி என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் திமுக புதுப்புது உத்திகளை பயன்படுத்துவதாகவும், ஜனநாயகத்தை தேர்தல் ஆணையமும் காப்பாற்றாது என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை, அதிமுக தேர்தலை கண்டு அஞ்சாது என்றார்.
மதுரை, திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒன்றும் தேச விரோதமில்லை . மேலும், தோல்வி பயத்தின் காரணமாகவே, அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை” எனக் கூறி அதிமுகவை பின்னடைவை சந்திக்க வைக்க நினைக்கும் எதிரிகளின் திட்டத்தை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
மதுரையில் வைகை குடிநீர்த் திட்டம் 2ம் கட்டத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது 90% நிறைவடைந்துள்ள நிலையில் மேலும், பிரதான குழாயில் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக (நாளை)ஜூன்.19 வைகை வடகரை பகுதிகளில் வார்டு எண் 10 முதல் 16 வரை மற்றும் 21 முதல் 35 வரையான பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது. பெரியாா் பேருந்து நிலையம், கோகலே சாலை, மீனாட்சியம்மன் கோயிலின் சந்நிதி வீதிகள் உள்பட மாநகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. புதிய ரயிலுக்கான அதிகாரப்பூர்வ வழித்தடம், கட்டண விவரம், நேரம் உள்ளிட்ட தகவல்கள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள தென்னக ரயில்வே மதுரை கோட்டம்
மதுரை பெங்களூர் வந்தே பாரத் சேவை வரும் 20ஆம்தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேவையின் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதினம், ” அரசியல் கருத்துக்களை தான் ஏன் சொல்லக்கூடாது?. தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன், தான் தமிழன், தானும் வாக்களிக்கிறேன், தனக்கு வாக்கு உரிமை உள்ளது. அதனால், தனக்கும் அரசியல் பேச உரிமை உள்ளது ” என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.