India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா் சோ்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 24-ஆம் தேதி இறுதி நாள் எனத் தெரிவிக்கப்பட்டது.
அக்கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், பிளாஸ்டிக், பாலிமா் , வெப் டிசைனிங், லாஜிஸ்டிஸ் ஆகியவற்றில் முழு நேர பொறியியல் பட்டயப் படிப்பும் உள்ளன.
மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று காலை 10 மணிமுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 400 கனஅடி நீர் ஆற்றில் அதிகாரிகள் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மதுரை மாவட்ட வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என எச்சரிதுள்ளனர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக பணிகள் துவங்காமல் பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. இதனிடையே, எய்ம்ஸ் மொத்த திட்டச் செலவு ரூ.1.977.80 கோடியில் இருந்து ரூ.2,021 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கிறது. பாதாள சாக்கடையில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று மதுரை சிம்மக்கல்லில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெறும் கைகளால் அகற்றிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரையில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில், இந்தியாவிலேயே முதல் முறையாக, புவிசார் குறியீடு மற்றும் புத்தொழில் முனைவோர்களுக்கான கண்காட்சி, மே 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், 170-க்கும் மேற்பட்ட அரங்குகள், தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனை அமர்வுகள், வாங்குபவர் – விற்பவர் சந்திப்பு, வங்கியாளர்களுடன் ஆலோசனைபெற அமர்வு, முதலீட்டாளர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெறும்.
மதுரை மாவட்டம், தோப்பூரில் அமையவுள்ள, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டி 9 ஆண்டுகளுக்கு பிறகு, திட்டப்பணிகள் தொடங்கப்படுவதால் , மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு ரூ.1.977.80 கோடியில் இருந்து ரூ.2,021 கோடியாக தற்போது, அதிகரித்துள்ளது.
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நீண்ட நாள் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி நேற்று வழங்கியிருந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி இருப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டிடம் 33 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை முதல் நடைபெறவிருந்த அரசுப் பொருட்காட்சி -2024 கனமழை காரணமாக, நாளை மறுநாள் (23.05.2024) வியாழன் அன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நாளை (மே.22) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது.
மதுரையில் கல்வி துறை சார்பில் அரசு பள்ளிகளில் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வகுப்பறை தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பெற்றோரை இணைத்து வகுப்புகள் தோறும் வாட்ஸ்அப் குழுக்கள் வரும் கல்வியாண்டு முதல் ஏற்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு மாணவரும் பெற்றோர் செல்போன் எண்ணும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.